தம்புள்ளை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 18 வயதுடைய இளைஞன’ உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து தம்புள்ளை – வெலிஹேன புலாகல வீதியின் வெலிஹேன பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
புலாகல நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பாலத்தின் மதிலில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
தம்புள்ளை காவல்துறையினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, காலி – உடுகம வீதியின் கல்கொடதெனிய சந்தியருகே இடம்பெற்ற விபத்திலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் உடுகம பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஆவார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

