Last Updated:
IND vs ENG Test series: இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பும்ரா விளையாடுவாரா என்பது குறித்தும் இந்திய அணியில் செய்யப்போகும் மாற்றம் குறித்தும் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு டெண்டுல்கர்-ஆண்டர்சன் கோப்பை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. சுதந்திரத்திற்கு முன்பு இரு அணிகளுக்கும் பங்களிப்பு செய்த முன்னாள் இந்திய வீரர்கள் இப்திகார் அலி பட்டோடி, மற்றும் அவரது மகனான மன்சூர் அலிகான் பட்டோடியின் நினைவாக, இந்தத் தொடருக்கு பட்டோடி கோப்பை என்ற பெயரிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், அண்மையில் ஓய்வு பெற்ற கிரிக்கெட் ஜாம்பவான்களின் பெயர்களைத் தொடருக்கு வைக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
அதன்படி, இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு டெண்டுல்கர்-ஆண்டர்சன் கோப்பை எனப் பெயர் வைக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே, 5 போட்டிகள் கொண்ட தொடரில் மூன்றில் மட்டுமே பும்ரா விளையாடுவார் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். எந்த 3 போட்டியில் விளையாடுவார் என்பது தொடரின் போக்கைப் பொறுத்து முடிவு செய்யப்படும் என்றும் கம்பீர் குறிப்பிட்டார்.
June 06, 2025 5:14 PM IST


