உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் சூத்திரதாரிகள் யார் என்பதை இன்று நாட்டு மக்கள் அறிந்துக்கொள்ளபோவதாக பிவிதுரு ஹெல உருமய தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கடந்த 16ஆம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இன்று (31) உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் சூத்திரதாரிகள் யார் என்பதை நாட்டுக்குத் தெரியப்படுத்துவதாக கூறியிருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பான ஊடக சந்திப்பு சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.
கோட்டாபய ராஜபக்ச
குறித்த ஊடக சந்திப்பல் முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.
தற்போதைய அரசாங்கம் அதை பிரதான சூத்திரதாரியின் பெயரை வெளியிடவில்லை என்றும், ஒன்றரை வருடக் கடினமான ஆய்வுக்குப் பிறகு, ‘ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரியைத் தேடுதல்’ என்ற தலைப்பில் ஒரு ஆய்வு நூலை நாங்கள் தயாரித்தோம் எனவும் அவர் முன்னதாக கூறியிருந்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |




