சென்னை: கோட்டக் மஹிந்திரா சொத்து மேலாண்மை நிறுவனம், கோட்டக் தங்கம் வெள்ளி பாசிவ் பண்ட் ஆப் பண்ட் (FoF) திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
ஓப்பன்-எண்டட் திட்டமான இது, கோட்டக் கோல்ட் ஈ.டி.எப். மற்றும் கோட்டக் சில்வர் ஈ.டி.எப். திட்டங்களில் முதலீடு செய்கிறது. இந்த புதுமையான திட்டம், நீண்டகால மூலதனப் பெருக்கத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது ஒரே திட்டத்தின் மூலம் இரண்டு மதிப்பு மிக்க உலோகங்களில் முதலீடு செய்யும் வாய்ப்பை முதலீட்டாளர்களுக்கு வழங்குகிறது. கடந்த அக்டோபர் 6-ம் தேதி தொடங்கிய இத்திட்டத்துக்கான பொது சந்தா (என்எப்ஓ) 20-ம் தேதி இன்றுடன் முடிவடைகிறது.