கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு உதவி புரிந்தார் என்ற குற்றச்சாட்டில் , யாழ்ப்பாணம் உடுவிலைச் சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கமைய இந்தக் கைது நடவடிக்கை நேற்று (10) முன்னெடுக்கப்பட்டது.
குறித்த சந்தேகநபர் காரில் பயணித்த போது கைது நடவடிக்கை இடம்பெற்றது.
காரில் இருந்து வாள், 5 ஆயிரம் வரையான போதை மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. (a)


