• Login
Saturday, May 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

கொழும்பிலிருந்து காஷ்மீர் வரை; வடுக்களை தோற்றுவித்த உலகளாவிய பயங்கரவாதம் – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
May 2, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
கொழும்பிலிருந்து காஷ்மீர் வரை; வடுக்களை தோற்றுவித்த உலகளாவிய பயங்கரவாதம் – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Home /
கொழும்பிலிருந்து காஷ்மீர் வரை; வடுக்களை தோற்றுவித்த உலகளாவிய பயங்கரவாதம்

வழிபாட்டுத் தலங்களான தேவாலயங்கள் மற்றும் விடுதிகள் இரத்தக் களரியாக மாற்றப்பட்ட அந்த கொடூரத்தை என்றுமே மறக்க முடியாது. இலங்கைத் தீவின் இழப்புக்களை நாம் நினைவுகூரும் இந்த வேளையில், இமயமலையின் வடக்கு பகுதிகளையும் நாம் உற்றுநோக்கிப் பார்க்க வேண்டும்,

இலங்கையர்களாகிய எமக்கு, ஏப்ரல் மாதம் மிகக் கனதியானதும், புனிதமானதுமான மாதமாகும். ஏழு ஆண்டுகளுக்கு முன்னதாக, ஈஸ்டர் ஞாயிறு தினமன்று, இலங்கைத் தீவின் அமைதி 269 உயிர்களைப் பழிவாங்கிய தொடர்ச்சியான ஒருங்கிணைந்த குண்டுவெடிப்புகளால் சிதறடிக்கப்பட்டது.

வழிபாட்டுத் தலங்களான தேவாலயங்கள் மற்றும் விடுதிகள் இரத்தக் களரியாக மாற்றப்பட்ட அந்த கொடூரத்தை என்றுமே மறக்க முடியாது. இலங்கைத் தீவின் இழப்புக்களை நாம் நினைவுகூரும் இந்த வேளையில், இமயமலையின் வடக்கு பகுதிகளையும் நாம் உற்றுநோக்கிப் பார்க்க வேண்டும்,

அங்கு சரியாக ஒரு வருடத்திற்கு முன்னதாக, இந்தியாவின் ‘குட்டி சுவிட்சர்லாந்து’ என்று அழைக்கப்படும் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கும் பயங்கரவாதத்தின் காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு சாட்சியானது.

2025 ஏப்ரல் 22 அன்று, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் பஹல்காம் புல்வெளிகளில் சுற்றுலாப் பயணிக் குழுவை வழிமறித்தனர். உலகளாவிய பயங்கரவாதத் தாக்குதல்களில் காணப்படும் சித்தாந்தப் பிரிவினையை எதிரொலிக்கும் வகையில், தாக்குதல் நடத்தியவர்கள் பாதிக்கப்பட்டவர்களை அவர்களின் நம்பிக்கையை அடையாளம் காணுமாறு கட்டாயப்படுத்தினர்.

ஒரு வெளிநாட்டவர் உட்பட 26 அப்பாவி பொதுமக்களைப் பிரித்தெடுத்த பிறகு, அவர்கள் கொடூரமாகக்கொலை செய்தனர். இதுவொரு ‘எதிர்ப்பு’ இயக்கம் அல்ல. இது ‘தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட்’ அமைப்பால் நடத்தப்பட்ட இலக்கு வைக்கப்பட்ட படுகொலைகளாகும்.

குறித்த அமைப்பானது, அமெரிக்காவால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாகும். பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பாவின் ஓரங்கமாக அறியப்படுகிறது. குறித்த அமைப்பின் நாசவேலைக்கான உத்தியானது வளர்ந்து வரும் சுற்றுலாத்துறையையும் வகுப்புவாத நல்லிணக்கத்தையும் முடக்க முயன்றது.

இலங்கையின் 2019 ஈஸ்டர் தாக்குதல்களைப் போலவே, பஹல்காம் படுகொலையும் பிராந்திய ஸ்திரத்தன்மையை சீர்குலைப்பதற்காக வடிவமைக்கப்பட்டதாகும்.

ஜம்மு – காஷ்மீர் சாதனை அளவிலான சுற்றுலாப் பயணிகளின் வருகையையும் வெற்றிகரமான உள்ளுர் ஜனநாயகப் பங்கேற்பையும் கண்டு வரும் வேளையில் குறித்த தாக்குதல் சம்பவம் நிகழ்ந்தது.

எல்லைக்கு அப்பால் உள்ள அதிகார வர்க்கத்திற்கு, வளமான காஷ்மீர் என்பது அவர்களின ஒரு கதைக்கு அச்சுறுத்தலாகும். நேரடி அரச ஆதரவிற்கான ஆதாரங்கள் மறுக்க முடியாதவையாகும். 2025 ஜூலை 28,  அன்று, இந்திய பாதுகாப்புப் படையினர் இப்படுகொலையில் ஈடுபட்ட மூன்று பாகிஸ்தானிய பயங்கரவாதிகளை முறியடித்தனர்.

மீட்கப்பட்ட அடையாள அட்டைகளில் கோயனைச் சேர்ந்த ஹபீப் தாஹிர் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த பிலால் அப்சல் ஆகியோரின் பெயர்கள் இருந்தன. இவர்கள் ‘ஆயிரம் காயங்களால் இரத்தம் சிந்த வைத்தல்’ என்ற அரசு சார்ந்த உத்தியை நிறைவேற்ற அனுப்பப்பட்ட பயிற்சி பெற்ற முகவர்களாவர்.

தீவிரவாதத்தின் உலகளாவிய மையப்பகுதியானது இந்தியாவின் அண்டை நாட்டில் இயங்கும் ‘பயங்கரவாதமாகும்’ இதுவொரு கூட்டு அச்சுறுத்தல் என்பதை இலங்கையர்கள் முதலில் அங்கீகரிக்க வேண்டும்.

உலகளாவிய பயங்கரவாதக் குறியீட்டின் படி 2026இல் பாகிஸ்தான் பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாகத் தர வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. 
2026 மார்சில் அமெரிக்க காங்கிரஸின் ஆராய்ச்சிச் சேவை அறிக்கை, அந்த நாடு பல நீண்டகாலமாகச் செயற்படும் தீவிரவாதக் குழுக்களின் நிலையான தளமாக இருப்பதை வெளிப்படையாக அடையாளம் காட்டுகிறது.

2026 மார்ச் 6, அன்று, உயர்மட்ட அமெரிக்க அரசியல்வாதிகளைக் குறிவைத்து கொலை செய்யத் திட்டமிட்ட ஆசிப் மெர்ச்சண்ட் என்ற பாகிஸ்தான் நாட்டவர் குற்றவாளியென அறிவிக்கப்பட்டார்.

முஹம்மது ஷாசெப் கான் போன்ற நபர்கள் மேற்கத்திய நாடுகளில் ஐஎஸ்ஐஎஸ் தூண்டுதலில் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் தாக்குதல்களைத்திட்டமிட்டதாக அண்மையில் ஒப்புக்கொண்டுள்ளனர். 

தென் கொரியாவில் நடந்த கைதுகள் முதல் மாலைத்தீவில் கண்டறியப்பட்ட துகள்கள் வரை, எதிர்மறைக் குழுக்களின் கால்தடம் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது.

வெறுப்பின் நவீனமயமாக்கப்பட்ட இயந்திரங்களின் அணுகு முறைகள் மாறி வருகின்றன. பயங்கரவாத நிதியுதவியானது சர்வதேச கண்காணிப்பாளர்களைத் தவிர்க்க என்க்ரிப்ட் செய்யப்பட்ட டிஜிட்டல் வொலட்கள் மற்றும் கிரிப்டோகரன்சிகளின் நிழல்களுக்கு மாறியுள்ளன. 

இதற்கிடையில், ஜெய்ஷ்-இ-முகமது போன்ற குழுக்கள் ‘ஜமாஅத்-உல்-மோமினாத்’ என்ற பிரத்யேக பெண்கள் பிரிவைத் தொடங்கியுள்ளன, குறித்த பிரிவானது தந்திரோபாய கடல்சார் பயிற்சிக்கானவொரு தரப்பை நிறுவியுள்ளது.

இது இலங்கை போன்ற தீவு நாடு குறிப்பாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விடயமாகும்.பஹல்காம் படுகொலையும் ஈஸ்டர் ஞாயிறு துயரமும் ஒரே விஷச்செடியின் இரண்டு கிளைகளாகும்.

இரு நிகழ்வுகளின்போது உயிரிழந்த உயிர்களைக் கௌரவிக்கும் வேளையில், பொறுப்புக்கூறலைக் கோருவதில் ஒற்றுமையாக நிற்க வேண்டும். பயங்கரவாதத்தை அரசாங்கக் கொள்கையின் கருவியாகக் கருதும் அண்டை நாடாருடன் பிராந்திய செழிப்பும் எமது குடிமக்களின் பாதுகாப்பும் ஒன்றாக இருக்க முடியாது என்பது வெளிப்படையானது. 

Read More

Previous Post

‘ஈஸ்டர் உயிரிழப்புக்களுக்காக மெழுகுவர்த்திகளை ஏந்தினோம்; தற்போது பஹல்காமிற்காகவும் மெழுகுவர்த்திகளை ஏந்தும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது’  – Sri Lanka Tamil News

Next Post

ஜேர்மனியிலிருந்து 5,000 இராணுவ வீரர்களை மீளப்பெறும் அமெரிக்கா

Next Post
ஜேர்மனியிலிருந்து 5,000 இராணுவ வீரர்களை மீளப்பெறும் அமெரிக்கா

ஜேர்மனியிலிருந்து 5,000 இராணுவ வீரர்களை மீளப்பெறும் அமெரிக்கா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin