ஆராய்ச்சியில் இருக்கிறேன்…
இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, ‘ஏ.ஐ மோசடிகள் குறித்து ஆராய்ச்சி செய்துவருகிறேன். அது முழுமடைந்த பிறகு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளேன். இதுக்குறித்து சில செய்தி நிறுவனங்களுடனும் நேர்காணல்களை ஏற்பாடு செய்துள்ளேன்’ என்று கூறினான்.
இரண்டாவது முறையாக செய்த சுசீர் பாலாஜியின் பிரேத பரிசோதனை அறிக்கையில், சுசீர் பாலாஜியின் தலையில் அவர் தன்னை காப்பாற்றுவதற்காக போராடிய அறிகுறிகள் தெரிகிறது.
சுசீர் பாலாஜி இறந்த இரண்டு நாள்களில் அவரது மொபைல் உள்ளிட்ட சாதனங்களை யாரோ இயக்கியிருக்கிறார்கள். மேலும், அவரது அப்பார்ட்மெண்டில் பல பொருள்கள் கலைத்து போடப்பட்டுள்ளன. பாத்ரூமில் ரத்தத்துளிகள் தெறித்துள்ளது.
என் மகன் கொல்லப்பட்டிருக்கிறான். ஆனால், அது போலீசாரால் மறைக்கப்படுகிறது. அதனால், எஃப்.பி.ஐ விசாரணை வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
‘எங்களால் தனி ஆளாக உண்மையை கண்டுபிடிக்க முடியாது. எதாவது பெரிய ஆளின் துணை வேண்டும்’ என்பது சுசீர் பாலாஜி பெற்றோரின் கூற்றாக உள்ளது. இதற்காக, கடந்த ஞாயிற்றுக்கிழமை, சுசீர் பாலாஜியின் அம்மா பூர்ணிமா தனது எக்ஸ் பக்கத்தில் எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமாசாமியை டேக் செய்து பதிவிட்டுள்ளார். அதில், “தனியார் இன்வெஸ்டிகேட்டர் ஒருவரை சுசீர் பாலாஜி மாரணத்தை விசாரிக்க நியமித்துள்ளோம். இரண்டாவது முறை பிரேத பரிசோதனை செய்துள்ளோம். அது போலீசார் கூறிய காரணத்துடன் ஒத்துப்போகவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்த எலான் மஸ்க், “இது தற்கொலை போல தெரியவில்லை” என்று பதிவிட்டுள்ளார்.
அதன் பின்பான எக்ஸ் பக்கப் பதிவுகளில், அமெரிக்க மீடியாக்கள் அவர் கொடுத்த நேர்காணல்களை ஒளிபரப்பவில்லை என்று பூர்ணிமா குற்றம் சாட்டியுள்ளார்.
இன்றைய உலகத்தில் அரசு எவ்வளவு பலமாக உள்ளதோ, அதே அளவிற்கான பலத்தை கார்ப்பரேட் நிறுவனங்களும் கொண்டுள்ளது. அப்படியான கார்ப்பரேட் உலகை எதிர்த்து போராடிய சுசீர் பாலாஜியின் மரணம் ‘கொலையா, தற்கொலையா?’ என்ற கேள்விக்கு உண்மை வெளிவருமா? அல்லது ஊமையாகவே உறங்கிவிடுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

