இஸ்ரேல் அழிந்து விடும் என்ற பயத்திலேயே அமெரிக்கா யுத்தத்தில் இறங்கியதாக ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி விமர்சித்துள்ளார்.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதில் இருந்து கமேனி வெளியிட்டுள்ள முதல் அறிக்கை இதுவாகும்.
ஈரானின் வெற்றி
அதில், “அமெரிக்க ஆட்சியை ஈரான் வென்றதற்கு எனது வாழ்த்துக்கள். அமெரிக்க ஆட்சி நேரடியாகப் போரில் நுழைந்தது, ஏனெனில் அது அவ்வாறு செய்யவில்லை என்றால், சியோனிச ஆட்சி முற்றிலுமாக அழிக்கப்படும் என்று அது உணர்ந்தது.
அந்த ஆட்சியைக் காப்பாற்றும் முயற்சியில் அது போரில் நுழைந்தது, ஆனால் எதையும் சாதிக்கவில்லை.” என அவர் என தெரிவித்துள்ளார்.
வெளியிடப்பட்ட அறிவிப்பு
இதேவேளை, முன்னதாக வெளியிட்டுள்ள பதிவில், இஸ்லாமிய குடியரசு அமெரிக்காவின் முகத்தில் ஒரு பெரிய அடியைக் கொடுத்தது. அது பிராந்தியத்தில் உள்ள முக்கிய அமெரிக்க தளங்களில் ஒன்றான அல்-உதெய்த் விமானத் தளத்தைத் தாக்கி சேதப்படுத்தியது.” என்றும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இரண்டு வாரங்கள் பொது நிகழ்வுகளில் இருந்து ஒதுங்கியிருந்த ஈரான் உச்ச தலைவர் அலி கமேனி, இன்று தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் பக்கத்தில் உரையொன்றை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

