Last Updated:
கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன்(101) வயது மூப்பு காரணமாக பொது வாழ்க்கையில் இருந்து விலகி ஓய்வில் இருந்து வந்தார். இவர் ஏற்கனவே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர் எம்.வி.கோவிந்தன், அச்சுதானந்தனை மருத்துவமனையில் சென்று பார்த்து, மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர். பின்னர் பேசிய அவர், ”இப்போதைக்கு அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதய நோய் நிபுணர்கள் குழு அவரது உடல்நிலையை கண்காணித்து வருகிறது,” என்று தெரிவித்தனர்.
இந்நிலையில், இன்று அவர் உடல்நிலை மோசமடைந்ததால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது இறப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
July 21, 2025 4:26 PM IST


