Last Updated:
கேரள உயர்நீதிமன்றம் திருமண நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை தடை செய்துள்ளது. கண்ணாடி டம்ளர்கள் பயன்படுத்த வேண்டும், பிளாஸ்டிக் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
திருமண நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை பயன்படுத்த தடை விதித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருமணம் மற்றும் இதர நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரை வழங்குவது அதிகரித்துள்ளது. இந்த நிலையில், பிளாஸ்டிக் தொடர்பான வழக்கு ஒன்றில் கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. திருமண வரவேற்பு, விருந்து மற்றும் முக்கிய நிகழ்வுகளில் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் வழங்குவதை தவிர்க்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அதற்கு பதிலாக, கண்ணாடி டம்ளர்களை பயன்படுத்தலாம் என்றும் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக்கை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கூறியுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு பிளாஸ்டிக் பயன்படுத்த கட்டாயம் அனுமதி தேவை என்றும் இதற்கான பொறுப்பு உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் அரை லிட்டர் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் முற்றிலும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மலைப் பிரதேசங்களில் பிளாஸ்டிக் தடை செய்வது குறித்து பரிசீலனையில் இருப்பதாகவும் விளக்கமளித்துள்ளார்.
March 09, 2025 3:37 PM IST


