பிடோக்கில் கேட் கவிழ்ந்து விழுந்ததில் 24 வயதுமிக்க வெளிநாட்டு கட்டுமான ஊழியர் ஒருவர் இறந்தார்.
நேற்று (நவம்பர் 6) நடந்த இந்த சம்பவத்தில், தானியங்கி ஸ்லைடிங் கேட்டை அவர் பழுதுபார்த்துக்கொண்டிருந்தபோது அது அவர் மீது விழுந்ததாக கூறப்பட்டுள்ளது.
TOTO லாட்டரி: 1 கொடியே 20 லட்சம் சிங்கப்பூர் டாலர் பரிசு… வெளியான முடிவுகள் – 28 வெற்றி பங்குகள்
நேற்று மாலை 4:05 மணியளவில், இந்த வேலை தொடர்பான சம்பவம் குறித்து 132B ஜாலான் பரி புரோங்கில் இருந்து தகவல் கிடைத்ததாக காவல்துறையினரும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் (SCDF) Mothership-பிடம் தெரிவித்தன.
விபத்தில் சிக்கிய 24 வயதுமிக்க அந்த ஊழியர் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் சிகிச்சை பலனின்றி பின்னர் அவர் இறந்தார்.
அவர் யோங் ஃபாங் ஆட்டோகேட் பிரைவேட் லிமிடெட் (Yong Fong Autogate Pte. Ltd) என்னும் நிறுவனத்தில் வேலை பார்த்தவர் என்பது கூடுதல் தகவல்.
சட்டவிரோத பிராத்தல் விடுதி நடத்திய பெண்: புகார் கொடுத்த ஊழியர்
சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில்; கடும் பலத்த சத்தம் கேட்டதாகவும் அதன் பின்னர் ஓர் அலறல் சத்தமும் கேட்டதாகவும் கூறினார்.
சக ஊழியர் என்று நம்பப்படும் நீல நிற சீருடை அணிந்த மற்றொரு நபர், உதவி கேட்டு சத்தம் போடுவதையும் காண முடிந்தது. மேலும் கீழே கிடைக்கும் ஊழியருக்கு முதலுதவி செய்ததாகவும் நேரில் பார்த்தவர் சொன்னார்.
இந்த சம்பவம் குறித்து மனிதவள அமைச்சகம் (MOM) விசாரணை நடத்தி வருகிறது.
காவல்துறையினர் விசாரணையும் தொடர்கிறது.
லாரிக்குள் இறந்த நிலையில் கிடந்த ஊழியர் – வேலைக்குச் செல்ல இருந்தவர் சடலமாக கிடந்த சோகம்

