முன்னாள் சுகாதார அமைச்சர் கெெஹலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வது மற்றும் அவரை பிணையில் விடுவிப்பதற்கான கோரிக்கை பற்றிய தீர்மானம் ஓகஸ்ட் முதலாம் திகதி அறிவிக்கப்படுமென, மேன்முறையீட்டு
நீதிமன்றம் அறிவித்துள்ளது. தரமற்ற தடுப்பூசி மருந்து கொள்வனவு தொடர்பிலான விசாரணை முடியும் வரை, தம்மை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவை இரத்து செய்யுமாறு கோரி, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஷஷி மகேந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை அறிவித்துள்ளது.

