தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் நோய் எதிர்ப்பு தடுப்பூசிகளை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகள் குழுவிற்கு எதிராக மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சட்டமா அதிபர் இன்று (03) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
இந்திய கடன் திட்டத்தின் கீழ் நாட்டில் பதிவு செய்யப்படாத இரண்டு இந்திய நிறுவனங்களிடமிருந்து மருந்துகளை கொள்வனவு செய்தமைக்கு எதிராக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட குழுவை பிரதிவாதிகளாக குறிப்பிட்டு தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு அழைத்த போது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நிர்மலன் விக்னேஸ்வரன் இதனை அறிவித்துள்ளார். R

