கோலாலம்பூர்: இன்று காலை 11 மணியளவில் கெந்திங் ஹைலேண்ட்ஸில் இருந்து இறங்கும் போது 21 பேரை ஏற்றிச் சென்ற சுற்றுலா பேருந்து கவிழ்ந்ததில் இரண்டு சீன பிரஜைகள் உயிரிழந்தனர். பகாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் வான் ஜைதி வான் இசா கூறுகையில், இருவருக்குமே தலையில் காயம் ஏற்பட்டதால் உயிரிழந்ததாகத் தெரிவித்தார்.
அவர்களின் உடல்கள் பெந்தோங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன,” என்று அவர் கூறினார். பேருந்தில் 18 சீன பிரஜைகளும் பேருந்து ஓட்டுநர் மற்றும் இரண்டு சுற்றுலா வழிகாட்டிகள் இருந்தனர். முன்னதாக, 21 வினாடிகள் கொண்ட வீடியோ வைரலானது.


