டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை மார்ச் 28 வரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுபானக்கூடங்களை தனியார் அமைப்பினர் நிர்வகிக்கும் வகையில் டெல்லியில் அண்மையில் மதுபானக் கொள்கை மாற்றி அமைக்கப்பட்டது. இதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குகளும் பதிவு செய்திருக்கிறது. இது தொடர்பான வழக்கில் ஏற்கனவே துணை முதலமைச்சராக இருந்த மனிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், பலமுறை சம்மன் அளித்தும் ஆஜராகாமல் இருந்து வந்த முதலமைச்சர் கெஜ்ரிவாலை நேற்று அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். மேலும் துணை முதலமைச்சராக இருந்த, மனீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சி எம்பி சஞ்சய் சிங், பார்திய ராஷ்டிரிய சமிதி கட்சி சட்டமேலவை உறுப்பினரான கவிதா ஆகியோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவாலுக்கு மருத்துவப் பரிசோதனை முடிந்த நிலையில்,அவர் ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனிடையே கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு ஒன்றும் விசாரணைக்கு வந்தது. அப்போது ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அர்விந்த் கெஜ்ரிவாலை 10 நாட்கள் விசாரிக்க அமலாக்கத்துறை தரப்பில் கோர முடிவு செய்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலை மார்ச் 28 வரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…