குவைத் நாட்டில் அடுக்குமாடியில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 2 தமிழர்கள் உள்பட 43க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்தனர்.
தெற்கு குவைத் பிராந்தியத்தின் மங்கஃப் நகரில் உள்ள 6 மாடி குடியிருப்பில் இந்தியத் தொழிலாளர்கள் குறிப்பாக கேரளா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இது கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபரும் என்டிபிசி குழுமத்தின் உரிமையாளருமான ஆபிரகாமுக்குச் சொந்த கட்டடம் ஆகும். இதில் கீழ்த்தளங்களில் ஏராளமான இந்தியத் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை 4.30 மணி அளவில் கீழ்த்தளத்தில் தீவிபத்து ஏற்பட்டது. அடுக்குமாடிக் குடியிருப்பில் கண்ணாடிகள் அதிகம் இருந்ததால் தீ மளமளவென மேல்நோக்கிப் பரவியது. தீவிபத்து நிகழ்ந்ததும் மாடியில் இருந்து பலர் குதித்துத் தப்ப முயன்றனர். எனினும் இந்த விபத்தில் 2 தமிழர்கள், கேரளாவைச் சேர்ந்த நால்வர் உள்பட 43 பேர் உயிரிழந்தனர். மேலும் 40 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இதையும் படிங்க : ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள் உயிரிழப்பு.. அதிரடி முடிவு எடுத்த மத்திய அரசு
இதையடுத்து, இந்தியர்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்த தீவிபத்தால் அந்த நாட்டில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
.
- First Published :
&w=750&resize=750,375&ssl=1)
