ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோவில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 200 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு அணிகளும் தற்போது குறைந்தது 2 போட்டிகளில் விளையாடி முடித்துள்ளன. அந்த வகையில் சென்னை அணி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று பாயின்ட்ஸ் டேபிளில் முதலிடத்தை பிடித்துள்ளது.
அடுத்து வரும் ஒவ்வொரு போட்டிகளிலும் ஐபிஎல் அணிகள் வெற்றி பெற முனைப்பு காட்டும் என்பதால் ஆட்டங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் லக்னோ மைதானத்தில் லக்னோ மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய குவின்டன் டி காக் மற்றும் கே.எல். ராகுல் இணை அணிக்கு அதிரடியான தொடக்கத்தை கொடுத்தது. ராகுல் 19 ரன்னில் ஆட்டமிழக்க அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் 9 ரன்னில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.
மார்கஸ் ஸ்டாய்னிஸ் 19 ரன்களில் வெளியேறினார். சிறப்பான ஆட்டத்தை கொடுத்த தொடக்க வீரர் குவிடன் டி காக் 38 பந்துகளில் 2 சிக்சர் 5 பவுண்டரியுடன் 54 ரன்கள் எடுத்தார். சிக்சரும் பவுண்டரியுமாக விளாசி ரன்களை சேர்த்த நிகோலஸ் பூரன் 21 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார்.
20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணி 199 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…