கோலாலம்பூர்:
குவாந்தான் நகராண்மை கழக (MBK) வாகன நிறுத்துமிடக் கட்டணத்தைச் செலுத்துவதற்கு ‘Scan2Park’ எனும் புதிய QR குறியீடு (QR Code) முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
வாகன ஓட்டிகள் இப்போது அந்தந்த பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள பலகைகளில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து நேரடியாகத் தங்கள் கைபேசி மூலம் கட்டணம் செலுத்தலாம்.
இது ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ‘Pahang Go’ செயலியை (App) பயன்படுத்தும் முறைக்கு ஒரு கூடுதல் வசதியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
•ல்QR குறியீட்டை ஸ்கேன் செய்தவுடன், அது மாநகராட்சியின் கட்டணப் பக்கத்திற்குச் செல்லும். அங்கிருந்து வாகன நிறுத்தம் செய்யும் நேரத்தைத் தேர்வு செய்து, டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தலாம்.
இந்த புதிய முறையைப் பயன்படுத்துவது குறித்து பொதுமக்களுக்கு வழிகாட்ட நகரின் பல இடங்களில் கியோஸ்க்குகள் (Kiosks) அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த டிசம்பர் 31-ஆம் தேதியுடன் தானியங்கி வாகன நிறுத்துமிட இயந்திரங்கள் (Autopay terminals) நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பொதுமக்கள் கட்டணம் செலுத்த சிரமப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இதற்குத் தீர்வாக இந்த ‘Scan2Park’ முறை கொண்டு வரப்பட்டுள்ளது.
குவாந்தான் மாநகராட்சி ஏற்கனவே ஏப்ரல் 2024-இல் காகிதக் கூப்பன்களின் பயன்பாட்டை நிறுத்திவிட்டு, முழுமையாக டிஜிட்டல் முறைக்கு மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




