• Login
Wednesday, August 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

குழந்தைகளை அடிமையாக்கும் இன்ஸ்டாகிராம்.. அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கு.. அனல் பறக்கும் வாதம்! | Meta Faces US Trial Over Allegations Facebook, Instagram is making Children Addicted to social media

GenevaTimes by GenevaTimes
August 19, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
குழந்தைகளை அடிமையாக்கும் இன்ஸ்டாகிராம்.. அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கு.. அனல் பறக்கும் வாதம்! | Meta Faces US Trial Over Allegations Facebook, Instagram is making Children Addicted to social media
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Vigneshkumar

Time
Updated: Wednesday, August 19, 2026, 12:35 [IST]

கலிபோர்னியா: குழந்தைகளை நீண்டநேரம் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமை பயன்படுத்த வைக்க.. அவர்களை அந்த தளங்களுக்கு அடிமையாக்கும் வகையில் தளங்களை உருவாக்கியதாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை தொடங்கிய முதல் நாளே இதில் அனல் பறக்கிறது. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்!

இந்த காலத்தில் திரும்பிய பக்கமெல்லாம் சமூக வலைத்தளம் தான். நமது அன்றாட வாழ்க்கையில் கணிசமான பகுதியை சமூக வலைத்தளங்கள் ஆக்கிரமித்துவிட்டது என்றே சொல்லலாம். குறிப்பாக சிறார்கள் சமூக வலைத்தளங்களுக்கு மிக அதிகமாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு இருந்து கொண்டு தான் இருக்கிறது.

Social media Childran Facebook instgram

அடிமையாக்கும் வகையில்!

இதற்கிடையே குழந்தைகளை வேண்டும் என்றே சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாக்கும் வகையில் மெட்டா நிறுவனம் தனது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களை வடிவமைத்துள்ளதாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கியுள்ளது. சோஷியல் மீடியா நிறுவனங்கள் எப்படி தங்கள் சமூக வலைத்தளங்களை டிசைன் செய்கிறது என்பதையே மாற்றி அமைக்கும் இந்த வழக்கின் விசாரணை அமெரிக்காவில் தொடங்கியுள்ளது.

மெட்டா நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்காவின் 29 மாகாணங்கள் இணைந்து இந்த வழக்கை தொடர்ந்துள்ளன. குழந்தைகளின் மனநலத்தை பாதிக்கும் வகையில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் வடிவமைக்கப்பட்டதாகவும், குழந்தைகளின் தனிப்பட்ட தகவல்களை முறையற்ற வகையில் சேகரித்து பயன்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கலிபோர்னியா, கொலராடோ, கென்டக்கி மற்றும் நியூ ஜெர்சி ஆகிய உள்ளிட்ட 29 மாகாணங்கள் இந்த வழக்கை தொடர்ந்துள்ளன.

ஆப்பு வைக்கும் ஏர்டெல்.. இனி இஷ்டத்திற்கு ஹாட்ஸ்பாட் போட்டு அன்லிமிடெட் யூஸ் பண்ண முடியாது!

ஆப்பு வைக்கும் ஏர்டெல்.. இனி இஷ்டத்திற்கு ஹாட்ஸ்பாட் போட்டு அன்லிமிடெட் யூஸ் பண்ண முடியாது!

பிஸ்னஸ் மாடல்

வழக்கு விசாரணையின் போது கலிபோர்னியா துணை அட்டர்னி ஜெனரல் மேகன் ஓ’நீல், “யூசர்களை தளத்தில் அதிக நேரம் தங்கள் தளங்களில் வைத்திருப்பது, அவர்களது டேட்டாவை சேகரிப்பது, தளங்களின் பாதுகாப்பு தொடர்பான உண்மைகளை பொதுமக்களிடம் இருந்து மறைப்பதை தான் மெட்டா தொடர்ந்து செய்து வருகிறது. சொல்லப்போனால் மெட்டாவின் பிஸ்னஸ் மாடலே இதுதான். குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளம் வயதினரை குறிவைத்தே இதை செய்துள்ளனர்” என்றார்.

பேஸ்பேக் மற்றும் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தும் இளைஞர்களிடையே பதற்றம், மனச்சோர்வு மற்றும் தற்கொலை போன்ற பிரச்சினைகளுக்கு அதிகரிப்பதாக அமெரிக்க மாகாணங்கள் குற்றம்சாட்டியுள்ளன. இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை மெட்டா நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

சீரக சம்பா முதல் சிக்கன் குழம்பு வரை.. இனி எதுவா இருந்தாலும் பிரச்சனை இல்லை.. கலக்கும் கூகுள் மேப்ஸ்

சீரக சம்பா முதல் சிக்கன் குழம்பு வரை.. இனி எதுவா இருந்தாலும் பிரச்சனை இல்லை.. கலக்கும் கூகுள் மேப்ஸ்

மறுப்பு

மெட்டா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பால் ஷ்மிட், “சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் சிலருக்கு பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், அனைத்து இளைஞர்களும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதால் பாதிக்கப்படுவதாக சொல்வது ஏற்கும் வகையில் இல்லை. இதை எந்தவொரு ஆய்வும் நிரூபிக்கவில்லை. நாங்கள் எங்கள் நிறுவனத்தை மேம்படுத்தவே விரும்புகிறோம். ஆபத்தானதாக மாற்ற விரும்பவில்லை” என்றார்.

இந்த வழக்கில் மெட்டா நிறுவனத்திற்கு எதிராக தீர்ப்பு வந்தால் சமூக வலைத்தளங்கள் மொத்தமாக மாறும். குறிப்பாக எவ்வளவு லைக்ஸ் என்பதை மறைக்கப்படும்.. நாம் ஸ்க்ரால் செய்யும் போது தொடர்ந்து புதிய போஸ்ட்களை காட்டும் Infinite Scroll வசதியை நிறுத்தப்படும், இளம் வயதினர் தினசரி இவ்வளவு நேரம் தான் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த முடியும் என்ற நேர கட்டுப்பாடு கொண்டு வரப்படும். 13 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும். இப்படி ஒரு நீதிமன்ற தீர்ப்பால் ஒட்டுமொத்த சமூக வலைத்தளமும் மாறும் என்பதால் இந்த வழக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

பரபர குற்றச்சாட்டு

இந்த வழக்கில் மெட்டா நிறுவனத்தின் முன்னாள் பாதுகாப்பு பொறியாளர் ஆர்டுரோ பெஜார் முதல் சாட்சியாக ஆஜராகியுள்ளார். மெட்டாவில் குழந்தைகளை பாதுகாக்கும் கருவிகள் போதுமானதாக இல்லை என்றும் இது அந்த நிறுவனத்துக்கே தெரியும் என்று அவர் நீண்ட காலமாக குற்றம்சாட்டி வருகிறார். பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் போதிய பாதுகாப்பு வசதிகளை கொண்டு வர அந்நிறுவனம் கவனம் செலுத்தவில்லை என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். 13 வயதிற்கு குறைவானவர்கள் சமூக வலைத்தளங்களில் இருப்பதை கட்டுப்படுத்தவும் மெட்டா நடவடிக்கை எடுக்கவில்லை என பெஜார் குற்றஞ்சாட்டினார்.

 தனக்கு தானே வாரிசை உருவாக்கும் AI.. மனிதர்களையே அழிக்கும் ஆபத்து.. ஒரு நொடி அதிர்ந்த ஆய்வாளர்கள்

தனக்கு தானே வாரிசை உருவாக்கும் AI.. மனிதர்களையே அழிக்கும் ஆபத்து.. ஒரு நொடி அதிர்ந்த ஆய்வாளர்கள்

6 வாரங்கள்

இப்படி எடுத்தவுடனேயே இந்த வழக்கு பரபரப்பாக போய் கொண்டு இருக்கிறது. இதில் மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசெரி ஆகியோரும் சாட்சியம் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கு விசாரணை சுமார் 6 வாரங்கள் நடைபெற உள்ள நிலையில், மேலும் பல பரபரப்புகள் அரங்கேறும் என தெரிகிறது.

குழந்தைகளை அடிமையாக்கும் வகையில் செயல்படுவதாக மெட்டா நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்படுவது இது முதல்முறை இல்லை. அதேபோல ஸ்னாப்சாட், டிக்டாக், யூடியூப் உள்ளிட்ட நிறுவனங்கள் மீதும் இந்த வழக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary

Meta is facing a major US court trial over allegations that Facebook, Instagram designed to keep children engaged(பேஸ்புக், இன்ஸ்டாகிராமை பயன்படுத்தும் குழந்தைகள்): Children Usage of social media like Facebook and Instagram apps.

Read More

Previous Post

22வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் குறித்து சபாநாயரின் அறிவிப்பு!

Next Post

விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் நடத்தப்படுவதாக பொய்த் தகவல் பரப்பியவர் கைது – Sri Lanka Tamil News

Next Post
விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் நடத்தப்படுவதாக பொய்த் தகவல் பரப்பியவர் கைது – Sri Lanka Tamil News

விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் நடத்தப்படுவதாக பொய்த் தகவல் பரப்பியவர் கைது - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin