• Login
Thursday, July 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

குளுவாங்கில் பள்ளிப் பேருந்து மோதி முதலாம் ஆண்டு மாணவன் சம்பவ இடத்திலேயே பலி! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 16, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
குளுவாங்கில் பள்ளிப் பேருந்து மோதி முதலாம் ஆண்டு மாணவன் சம்பவ இடத்திலேயே பலி! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

ஜோகூர், குளுவாங் அருகே உள்ள தாமான் ஸ்ரீ லாலாங் (Taman Sri Lalang) பகுதியில், பள்ளிப் பேருந்தில் இருந்து இறங்கிய சில நிமிடங்களிலேயே அதே பேருந்து மோதி முதலாம் ஆண்டு பயிலும் பள்ளிச் சிறுவன் ஒருவன் நேற்று மாலை துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தான்.

இச்சம்பவம் குறித்துக் குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டண்ட் கமிஷனர் பஹ்ரேன் நோஹ் கூறுகையில், பள்ளிப் பேருந்தை ஓட்டி வந்த 36 வயதுடைய பெண் ஓட்டுநர், சிறுவனை இறக்கிவிட்டுப் பேருந்தை நகர்த்தியபோது இந்த விபத்து நேரிட்டுள்ளதாகத் தெரிவித்தார். விபத்து நடந்ததை உணர்ந்த அதிர்ச்சியில் அந்த பெண் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்தார்.

பேருந்து மோதியதில் தலையில் மிகக் கடுமையான காயங்களுக்குள்ளான அந்த சிறுவன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக போலீசார் உறுதிப்படுத்தினர்.

விபத்தை ஏற்படுத்திய பெண் ஓட்டுநர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து, கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணத்தை விளைவித்தல் என்ற குற்றச்சாட்டின் கீழ், சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987-இன் பிரிவு 41(1)-ன் கீழ் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



Read More

Previous Post

ஈரான் போர்: ‘போரை நீட்டிக்க சிலர் முயற்சிக்கிறார்கள்’ – ஜே.டி.வான்ஸ்|’Some Want Endless War’: JD Vance’s Remarks Spark Debate

Next Post

2.5 மில்லியன் மோசடி : சிறிலங்கா டெலிகொம் நிறுவனத்துக்கு நீதிமன்றின் உத்தரவு

Next Post
2.5 மில்லியன் மோசடி : சிறிலங்கா டெலிகொம் நிறுவனத்துக்கு நீதிமன்றின் உத்தரவு

2.5 மில்லியன் மோசடி : சிறிலங்கா டெலிகொம் நிறுவனத்துக்கு நீதிமன்றின் உத்தரவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin