இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் பல விசாரணைக் குழுக்கள் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்து, கடந்த காலங்களில் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான 20க்கும் மேற்பட்ட முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் பெற்ற கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகள் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைய விசாரணைக் குழுக்கள் இந்தத் தகவல்களைப் பெற நாடாளுமன்ற பதிவு அலுவலகம் மற்றும் நாடாளுமன்ற சேவைகள் பணியகத்தின் உதவியையும் நாடியுள்ளன.
விசாரணையின் நோக்கம்
மேலும் இந்த விசாரணையின் நோக்கம் முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் வசம் உள்ள சொத்துக்களை சரிபார்ப்பதாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்றம் கூட்டத்தொடர்இல்லாத நாட்களில் இலஞ்ச ஒழிப்பு ஆணைய விசாரணைக் குழுக்கள் தகவல்களைச் சேகரிக்கின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கார்த்திகை உற்சவம்

