2024ஆம் ஆண்டுக்கான இரண்டாம் உத்தேச மின் கட்டணத் திருத்தம் தொடர்பான மக்களின் வாய்மூல கருத்துக் கோரல்கள் கோரப்படவுள்ளன.
இந்நிகழ்வு இன்று (09) இடம்பெறவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின் கட்டணத்திருத்தம்
பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நாளை முற்பகல் 9 மணி முதல் பிற்பகல் 4.30 வரை ஏற்றுக் கொள்ளப்படவுள்ளது.

இது தொடர்பான எழுத்து மூலக் கருத்துக் கோரல்கள் நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளன.
கட்டண திருத்தம் தொடர்பான ஆணைக்குழுவின் இறுதி முடிவு ஜூலை 15 ஆம் திகதி பொதுமக்களின் ஆலோசனைக்குப் பின்னர் வழங்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |


