Last Updated:
திடீரென குப்பைத் தொட்டியில் இருந்த மர்மப் பொருள் வெடித்துச் சிதறியது. இதில் அங்கிருந்த பொருட்கள் 30 அடி உயரத்திற்கு தூக்கி வீசப்பட்டன. இதனால், அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
தெலங்கானாவில் குப்பைத் தொட்டியில் இருந்து திடீரென மர்மபொருள் வெடித்ததில் தூய்மை பணியாளர் உயிரிழந்துள்ளார்.
குசய்குடா பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், அங்குள்ள குப்பைத் தொட்டியில் போடப்பட்டிருந்த குப்பைகளை அகற்றும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென குப்பைத் தொட்டியில் இருந்த மர்மப் பொருள் வெடித்துச் சிதறியது. இதில் அங்கிருந்த பொருட்கள் 30 அடி உயரத்திற்கு தூக்கி வீசப்பட்டன. இதனால், அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
இந்த வெடி விபத்தில் தூய்மைப் பணியாளர் நாகராஜூ சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் நாகராஜூ உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல் கட்ட விசாரணையில் தொழிற்சாலைகளில் பயன்படுத்திய வேதிப்பொருட்கள் குப்பைத் தொட்டியில் கொட்டப்பட்டதும், அவற்றால் வெடி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் இருந்த சிசிடியில் பதிவாகியுள்ளது.
March 23, 2025 2:01 PM IST


