• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: இண்டியா கூட்டணி சார்பில் பொது வேட்பாளர்; கட்சிகளுடன் கார்கே பேச்சுவார்த்தை | General candidate for the Vice President election on behalf of the India Alliance

GenevaTimes by GenevaTimes
August 10, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: இண்டியா கூட்டணி சார்பில் பொது வேட்பாளர்; கட்சிகளுடன் கார்கே பேச்சுவார்த்தை | General candidate for the Vice President election on behalf of the India Alliance
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: குடியரசு துணைத் தலை​வர் பதவிக்​கான தேர்​தலில் இண்​டியா கூட்​டணி சார்​பில் பொது வேட்​பாளரை நிறுத்த முடிவு செய்​யப்​பட்டு உள்​ளது. இது தொடர்​பாக காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கே, பல்​வேறு கட்​சிகளின் தலை​வர்​களு​டன் தொடர்ந்து பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கிறார்.

குடியரசு துணைத் தலை​வ​ராக இருந்த ஜெகதீப் தன்​கர் கடந்த ஜூலை 21-ல் ராஜி​னாமா செய்​தார். இதையடுத்​து, வரும் செப். 9-ம் தேதி குடியரசு துணைத் தலை​வர் பதவிக்கு தேர்​தல் நடை​பெறும் என்று தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​துள்​ளது.

இதற்​கான வேட்​புமனு தாக்​கல் கடந்த 7-ம் தேதி தொடங்​கியது. வரும் 21-ம் தேதிக்​குள் வேட்​புமனுக்​களை தாக்​கல் செய்ய வேண்​டும். வரும் 22-ம் தேதி வேட்​புமனுக்​கள் மீதான பரிசீலனை நடை​பெறும். வேட்​புமனுக்​களை திரும்​பப் பெற ஆக. 25-ம் தேதி கடைசி நாள் என்று தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​துள்​ளது.

இந்த சூழலில், குடியரசு துணைத் தலை​வர் தேர்​தலுக்​கான வேட்​பாளரை தேர்வு செய்​வது தொடர்​பாக தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யின் ஆலோ​சனைக் கூட்​டம் டெல்​லி​யில் நடை​பெற்​றது. இதில், வேட்​பாளரை தேர்வு செய்​யும் அதி​காரம் பிரதமர் நரேந்​திர மோடி, பாஜக தலை​வர் ஜே.பி. நட்டா ஆகியோ​ருக்கு வழங்​கப்​பட்​டது. பாஜக தரப்​பில் குஜ​ராத் ஆளுநர் ஆச்​சார்ய தேவ்​விரத், கர்​நாடக ஆளுநர் தாவர்​சந்த் கெலாட், சிக்​கிம் ஆளுநர் ஓம் மாத்​தூர் மற்​றும் மாநிலங்​களவை துணைத் தலை​வர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் உள்​ளிட்​டோரின் பெயர்​கள் பரிசீலிக்​கப்​பட்டு வரு​வ​தாகத் தெரி​கிறது. வரும் 13-ம் தேதி முதல் 20-ம்தேதிக்​குள் தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யின் குடியரசு துணைத் தலை​வர் வேட்​பாளர் அறிவிக்​கப்​படு​வார் என்று பாஜக வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன.

இந்​நிலை​யில், இண்​டியா கூட்​ட​ணி​யின் உயர்​நிலை ஆலோ​சனைக் கூட்​டம் கடந்த 7-ம் தேதி டெல்​லி​யில் நடை​பெற்​றது. மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி தலை​மை​யில் நடை​பெற்ற இந்​தக் கூட்​டத்​தில் காங்​கிரஸ், சமாஜ்​வா​தி, ராஷ்டிரிய ஜனதா தளம், திரிண​மூல் காங்​கிரஸ், திமுக, தேசிய மாநாடு, பிடிபி, சிவசேனா (உத்​தவ் அணி), தேசி​ய​வாத காங்​கிரஸ் (சரத்பவார் அணி) உட்பட 25 கட்​சிகளின் தலை​வர்​கள் பங்​கேற்​றனர். இந்​தக் கூட்​டத்​தில் இண்​டியா கூட்​டணி சார்​பில் குடியரசு துணைத் தலை​வருக்​கான பொது வேட்​பாளரை நிறுத்த முடிவு செய்​யப்​பட்​டது.

இதுதொடர்​பாக காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கே, கூட்​ட​ணி கட்​சிகளின் தலை​வர்​களு​டன் தொடர்ந்து பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கிறார். அவர்​களின் விருப்​பங்​களை கேட்​டறிந்த பிறகு, ஒரு​மித்த கருத்​தின் அடிப்​படை​யில் பொது வேட்​பாளர் தேர்வு செய்​யப்​படு​வார்என்று தெரி​கிறது.

தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யின் வேட்​பாளர் அறிவிக்​கப்​பட்ட பிறகே, இண்​டியா கூட்​ட​ணி​யின் வேட்​பாளர் முடிவு செய்​யப்​படு​வார் என்று காங்​கிரஸ் வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன. இது தொடர்​பாக பாஜக வட்​டாரங்​கள் கூறிய​தாவது: தேசிய ஜனநாயக கூட்​டணி சார்​பில் பொது வேட்​பாளர் நிறுத்​தப்​படு​வார். இது குறித்து பாஜக தலை​வர் நட்​டா, கூட்​டணிக் கட்சி தலை​வர்​களு​டன்பேச்​சு​வார்த்தை நடத்தி வருகிறார்.

எங்​கள் கூட்​ட​ணி​யின் வேட்​பாளரே குடியரசு துணைத் தலை​வ​ராக தேர்வு செய்​யப்​படு​வார். எனவே, வேட்​பாளர் விவ​காரத்​தில் மிகுந்த கவனம் செலுத்தி வரு​கிறோம். நாடாளு​மன்ற அனுபவம் இருக்க வேண்​டும். மாநிலங்​களவையை திறம்பட வழிநடத்த வேண்​டும் என்​ப​தால், பல்​வேறு மூத்த தலை​வர்​களின் பெயர்​களை பரிசீலனை செய்து வரு​கிறோம். குஜ​ராத், கர்​நாட​கா, சிக்​கிம், காஷ்மீர் மாநிலங்​களின் தற்​போதைய ஆளுநர்​கள் மற்​றும் பல்​வேறு முன்​னாள் ஆளுநர்​கள், நாடாளு​மன்ற அனுபவம்​மிக்க பாஜக மூத்த தலை​வர்​களின் பெயர்​கள் பரிசீலனை​யில் உள்​ளன. பிற்​படுத்​தப்​பட்ட வகுப்​பைச் சேர்ந்த சில பெண் தலை​வர்​களின் பெயர்​களும் பரிசீலிக்​கப்​படு​கின்​றன.

தற்​போது பழங்​குடி​யினத்தை சேர்ந்த திர​வுபதி முர்மு குடியரசுத் தலை​வ​ராக பதவி வகிக்​கிறார். இதே​போல, குடியரசு துணைத் தலை​வர் பதவிக்​கான வேட்​பாளர் தேர்​வும் ஆச்​சரி​யம் அளிக்​கும் வகை​யில் இருக்​கும். இவ்​வாறு பாஜக வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.

வாக்​கெடுப்பு நடை​முறை என்ன? – மாநிலங்​களவை செய​லா​ளர் பி.சி. மோடி, குடியரசு துணைத் தலை​வர் பதவி தேர்​தலுக்​கான அதி​காரி​யாக நியமிக்​கப்​பட்டு உள்​ளார். இணைச் செய​லா​ளர் கரிமா ஜெயின், மாநிலங்​களவை செயலக இயக்​குநர் விஜய்​கு​மார் ஆகியோர் உதவி தேர்​தல் அதி​காரி​களாக நியமிக்​கப்​பட்டு உள்​ளனர்.

தேர்​தலில் போட்​டி​யிட விரும்​பும் வேட்​பாளர்​கள், அவர்​களிடம் வேட்​புமனுக்​களை தாக்​கல் செய்ய வேண்​டும். ஒரு வேட்​பாளரை குறைந்​த​பட்​சம் 20 எம்​.பி.க்​கள் முன்​மொழிய வேண்​டும். இந்த தேர்​தலில் மக்​களவை மற்​றும் மாநிலங்​களவை எம்​.பி.க்​கள் மட்​டுமே வாக்​களிக்க முடி​யும். நாடாளு​மன்ற வளாகத்​தில் செப்​டம்​பர் 9-ம் தேதி தேர்​தல் நடை​பெறும். அன்​றைய தினமே முடிவு​கள் அறிவிக்​கப்​படும். மக்​களவை​யில் 543 எம்​.பி.க்​கள், மாநிலங்​களவை​யில் 233 எம்​.பி.க்​கள், 12 நியமன எம்​.பி.க்​கள் இடங்​கள் உள்​ளன. ஒட்​டுமொத்​த​மாக 788 எம்​.பி.க்​கள் குடியரசு துணைத் தலை​வர் தேர்​தலில் வாக்​களிக்க தகுதி உடைய​வர்​கள்.

தற்​போது மக்​களவை​யில் ஒரு எம்​.பி., மாநிலங்​களவை​யில் 5 எம்​.பி.க்​கள் இடங்​கள் காலி​யாக உள்​ளன. எனவே, வரும் தேர்​தலில் 782 பேர் மட்​டுமே வாக்​களிக்க உள்​ளனர். தேர்​தலில் வெற்றி பெற 50 சதவீத எம்​.பி.க்​களின் ஆதரவுதேவை. இதன்படி 391 எம்.​பி.க்​களின் ஆதரவை பெறும் வேட்​பாளர், புதிய குடியரசு துணைத் தலை​வ​ராக தேர்வு செய்​யப்​படு​வார். நாடாளு​மன்​றத்​தில் பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்கு 422 எம்​.பி.க்​கள், எதிர்க்​கட்​சிகளின் இண்​டியா கூட்​ட​ணிக்கு 312 எம்​.பி.க்​களின் பலம் உள்​ளது. ஆளும் பாஜக கூட்​ட​ணிக்கு பெரும்​பான்மை பலம் இருப்​ப​தால், அந்த கூட்​ட​ணி​யின் வேட்​பாளர் வெற்றி பெறு​வது உறுதி என்று அரசி​யல் நோக்​கர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.



Read More

Previous Post

Tamilmirror Online || இராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் போராட்டம்

Next Post

யாழ்ப்பாணத்தில் கத்திகுத்து தாக்குதல் சம்பவ இடத்தில் ஒருவர் பலி

Next Post
யாழ்ப்பாணத்தில் கத்திகுத்து தாக்குதல் சம்பவ இடத்தில் ஒருவர் பலி

யாழ்ப்பாணத்தில் கத்திகுத்து தாக்குதல் சம்பவ இடத்தில் ஒருவர் பலி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin