இந்தியக் குடியரசுத் துணைத் தலைவராக பதவி வகித்து வந்த ஜெகதீப் தன்கர் கடந்த 21ஆம் தேதி திடீரென தனது ராஜினாமாவை அறிவித்தார். அவரது ராஜினாமாவுக்கு உடல் நலனை காரணமாக அவர் சொல்லியுள்ளார்.
இருந்தாலும், அவரது ராஜினாமா குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றன. மேலும், அடுத்த துணைத் தலைவர் யார் எனும் விவாதமும் எழுந்துள்ளது.
பிகார் பாஜகவினர், அம்மாநில முதலமைச்சரும், ஜனதா தள் தலைவருமான நிதிஷ் குமாருக்கு அந்தப் பதவி வழங்கலாம் எனும் ரீதியில் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அதேசமயம், பாஜக பரிசீலனையில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், மகாராஷ்டிரா ஆளுநருமான சி.பி. ராதாகிருஷ்ணன், மத்திய இணை அமைச்சரும் பிஹார் முன்னாள் முதலமைச்சரின் மகனுமான ராம்நாத் தாகூர், பிகார் ஆளுநர் முகமது ஆரிஃப் கான் மற்றும் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான முக்தர் அப்பாஸ் நக்வி ஆகியோரின் பெயர்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், “கடந்த முறை, வெங்கய்யா நாயுடு ஜனாதிபதியாக ஆக்கப்படுவார் என்று விவாதங்கள் நடந்தன. ஆனால் அநீதி நடந்ததால் அவர் டெல்லியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார். இந்தியாவின் துணை ஜனாதிபதி தெலுங்கானாவைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
ஏ.என்.ஐ. செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், “இந்தியக் குடியரசுத் துணை தலைவர் பதவியை ஜெகதீப் தன்கர் ஏன் ராஜினாமா செய்தார் என்று எனக்குத் தெரியவில்லை. அது துரதிர்ஷ்டவசமானது. இந்தியாவின் துணை ஜனாதிபதி தெலுங்கானாவைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
கடந்த முறை, வெங்கய்யா நாயுடு ஜனாதிபதியாக ஆக்கப்படுவார் என்று விவாதங்கள் நடந்தன. ஆனால் அநீதி நடந்ததால் அவர் டெல்லியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார். தெலுங்கு பேசும் ஒருவர் தனது வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
#WATCH | Delhi: On a question by ANI on the resignation of Jagdeep Dhankhar as the Vice President, Telangana CM Revanth Reddy says, “…’100 khoon maaf karne ke liye’ it would be good if Bandaru Dattatraya is made the Vice President…”
“I do not know why Dhankhar ji resigned.… pic.twitter.com/DJ5zPxZqy0
— ANI (@ANI) July 23, 2025
அதை சரிசெய்ய பண்டாரு தத்தாத்ரயாவுக்கு ஹரியானா ஆளுநர் பொறுப்பு வழங்கப்பட்டது. அவர் மத்திய அமைச்சராக இருந்தபோது, அவரது பதவி ஜி கிஷன் ரெட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது. பண்டி சஞ்சய் (தெலுங்கானா பாஜக) தலைவராக இருந்தார். ஆனால் இப்போது ஒரு பிராமணரான ராமச்சந்தர் ராவ் அந்தப் பொறுப்பை வழங்கியுள்ளார்.
தெற்கில் உள்ள அனைத்து ஓபிசிக்களும், குறிப்பாக தெலுங்கானாவில் உள்ள அனைத்து ஓபிசிக்களும் தேசிய ஜனநாயகக் கூட்டணியால் அந்தஸ்தில் குறைக்கப்பட்டனர். எனவே, பண்டாரு தத்தாத்ரயாவை துணை ஜனாதிபதியாக ஆக்கினால் நல்லது” எனத் தெரிவித்துள்ளார்.
July 23, 2025 6:43 PM IST
குடியரசுத் துணைத் தலைவர் ராஜினாமா: “வெங்கய்யா நாயுடுவுக்கு அநீதி நடந்தது..” என்ன சொல்கிறார் தெலங்கானா முதல்வர்

