சமூக வலைதங்களில் சமீப காலமாக எண்ணற்ற வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அதில் பெரும்பாலான வீடியோக்கள் உணவு சம்பந்தமானதாக இருக்கும். டெலிவரி செய்யப்பட்ட உணவில் பூச்சிகள், ஐஸ்க்ரீமில் கைவிரல் துண்டு இருந்ததாக கூட சமீபத்தில் வைரலாக வீடியோவை நாம் பார்த்திருப்போம். இது நாம் சாப்பிடும் உணவின் தரம் குறித்த கேள்விகளை எழுப்புகின்றன. சமீபத்தில், இதுபோன்ற மற்றொரு வீடியோ ஒன்று வைரலானது.
தெலுங்கானாவின் விகாராபாத்தில் உள்ள கரேலி கிராமத்தில் லட்சுமிகாந்த் ரெட்டி மற்றும் அனந்தயா என்ற இருவர் உள்ளூர் கடையில் இருந்து 4,000 மதிப்புள்ள மதுபானங்களை, ஒரு மதுபானக் கடையில் வாங்கியுள்ளனர். ஆனால் அவர்களுக்கு அன்று எதிர்பாராத சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. அதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
In a viral video from Dharur, Vikarabad, #Telangana, a consumer found Lizard in a #Budweiser beer purchased in a local liquor shop. pic.twitter.com/8jMfZuZe67
— Sowmith Yakkati (@YakkatiSowmith) October 25, 2024
அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில், இறந்த பல்லி ஒன்று அவர்கள் வாங்கிய மது பாட்டிலினுள்ளே மிதக்கிறது. இந்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறது. அதேசமயம், இது தொடர்பாக உடனே, இருவரும் காவல் நிலையத்திற்கு விரைந்து சென்று சம்பவம் குறித்து புகார் அளித்தனர். இது குறித்து மதுபானக் கடையில் விசாரணை நடத்திய நிலையில், அது மதுபானம் தயாரிக்கும் இடத்தில் நடந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.
இந்த வீடியோவுக்கு கீழ் கமெண்ட் செய்யும் நெட்டிசன்கள் பலரும், கடைகளில் வாங்கும் உணவு தரத்தையும் விமர்சித்து வருகின்றனர். சிலர் கடையில் வாங்கும் உணவில் பேராபத்து இருப்பதாக கூறி வருகின்றனர்.
ஹைதராபாத்தில் ஒரு குடும்பத்தினர் ஆர்டிசி கிராஸ்ரோட்ஸில் அமைந்துள்ள பவார்ச்சி பிரியாணியில் இருந்து சொமோட்டோவில் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்துள்ளனர்.
హైదరాబాద్ ఆర్టీసీ క్రాస్ రోడ్ లోనీ బావర్చి హోటల్లో చికెన్ బిర్యానిలో ప్రత్యక్షమైన బల్లి
అంబర్పేట డిడి కాలనీ కి చెందిన విశ్వ ఆదిత్య ఆన్లైన్లో జొమాటోలో చికెన్ బిర్యానికి ఆర్డర్
జొమోటో బాయ్ తీసుకువచ్చిన చికెన్ బిర్యానిలో బల్లి వచ్చిందని కుటుంబ సభ్యుల ఆరోపణ
బావర్చి యాజమాన్యం… pic.twitter.com/5h0x1fltiQ
— Telugu Scribe (@TeluguScribe) December 2, 2023
பிரியாணி பார்சல் வாங்கி அதனை திறந்து பார்த்த போது செத்த பல்லியுடன் பிரியாணி வந்தது. ஆம்பர்பேட்டை டிடி காலனியைச் சேர்ந்த விஷ்வா ஆதித்யா என்ற நபர் இதனை ஆர்டர் செய்ததாக கூறப்படுகிறது.
வீடியோவாக எடுக்கப்பட்ட இந்த அதிர்ச்சிகரமான சம்பவம், இணையத்தில் வெளியாகி, பார்வையாளர்களை திகைக்க வைத்தது. குடும்ப உறுப்பினர்கள் ஆசையோடு பிரித்த பிரியாணியை ஒரு தட்டில் நிரப்பி வைத்திருப்பதையும், அதில் ஒரு கருப்பு பல்லி உயிரற்ற நிலையில் கிடப்பதையும் அந்த வீடியோவில் பார்க்க முடியும். இது குறித்து சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு சென்று நியாயம் கேட்டு போராட்டமும் நடந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டே தான் இருக்கின்றன எனவும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)