கிளிநொச்சியில் விபத்தில் சிக்கிய மாணவர் ஒருவர் உயிர் தப்பியுள்ளார்.
குறித்த விபத்து நேற்று (26-02-2026) இடம்பெற்றுள்ளது.
விபத்தில் சிக்கிய மாணவர் தற்போது நடைபெற்றுவரும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சாரதி அனுமதிப்பத்திரம்
இந்தநிலையில், பரீட்சை எழுதிவிட்டு வீட்டுக்கு வந்து மோட்டார் சைக்கிளை எடுத்து கடைக்குச் சென்றவேளையே இந்த விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது.

இதையடுத்து, காயமடைந்த மாணவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், குறித்த மாணவனுக்குச் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை எனக் கிளிநொச்சிப் போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |






