சிங்கப்பூர் மத்தியப் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் 4.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
சுமார் 1200 போதைப்பொருள் வியாபாரிகளுக்கு ஒரு வாரத்திற்கு சப்ளை செய்யும் அளவிற்கு போதைப் பொருட்கள் மற்றும் மாத்திரைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஜூன் 4-ஆம் தேதி Choa Chu Kang ஸ்ட்ரீட் 51 – இல் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் கார் பார்க்கிங்கில் அதிகாரிகள் கார் ஒன்றை சோதனையிட்டனர்.
சோதனை நடவடிக்கையில் 38 வயதுடைய கார் டிரைவரையும்,27 வயதுடைய பெண்ணையும் அதிகாரிகள் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் இருவர்களும் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள்.

