Last Updated:
நீங்கள் கோரிக்கை விடுக்காமல் திடீரென்று உங்களுக்கு அதிக கிரெடிட் கார்டு லிமிட் வழங்கப்பட்டிருக்கிறது என்று வரும் போன் காலை நிச்சயமாக நீங்கள் சந்தேகிக்க வேண்டும்
கிரெடிட் கார்டு லிமிட்டுகளை வங்கிகள் அவ்வப்போது அதிகரிப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால், மோசடிக்காரர்கள் இதையே பயன்படுத்தி மக்களிடமிருந்து பணத்தைப் பறிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
போன் கால் அல்லது டெக்ஸ்ட் மெசேஜ் மூலமாக வாடிக்கையாளர்களை அணுகி அவர்களுடைய கிரெடிட் கார்டு லிமிட் அதிகரிக்கப்பட்டு இருப்பதாகக் கூறி, OTP ஷேர் செய்யுமாறு கேட்கின்றனர். இந்த OTP மூலமாக ஒரு புதிய சாதனத்திற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டு, அதில் அவர்கள் ஒரு பெனிஃபிஷியரியைச் சேர்க்கின்றனர். இதனை அவர்கள் செய்தவுடன் ஒரு சில வினாடிகளில் உங்களுடைய பணம் டிரான்ஸ்ஃபர் செய்யப்படும்.
போன் கால் செய்பவரிடம் ஏற்கனவே உங்களுடைய பெயர் மற்றும் உங்களது கார்டின் கடைசி 4 இலக்கங்களை தெரிந்து வைத்திருப்பார்கள். எனவே, அவர்கள் நம்பகமானவர்கள்தான் என்று நீங்கள் நினைக்கலாம். பின்னர் உங்களுக்கு ஒரு OTP அனுப்பி அதனை போன் கால் மூலமாக உங்களை ஷேர் செய்யச் சொல்வார்கள்.
உண்மையில் OTP என்பது அதிக ரிஸ்க் நிறைந்த ஒரு செயல்பாடாக இருக்கிறது. ஏனென்றால், இது உங்களுடைய கார்டை ஒரு வாலட்டோடு இணைப்பதற்கு, புதிய போனில் UPI எனேபிள் செய்வதற்கு அல்லது ஒரு பணப் பரிமாற்றத்தை அங்கீகரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.
நீங்கள் கோரிக்கை விடுக்காமல் திடீரென்று உங்களுக்கு அதிக கிரெடிட் கார்டு லிமிட் வழங்கப்பட்டிருக்கிறது என்று வரும் போன் காலை நிச்சயமாக நீங்கள் சந்தேகிக்க வேண்டும். வங்கிகளுக்கு உங்களுடைய PIN நம்பர், CVB அல்லது OTP போன்றவை தேவை இல்லை. மேலும், இப்பொழுதே நீங்கள் கட்டாயமாக அதனை செய்ய வேண்டும் என்று வங்கி பக்கத்தில் இருந்து உங்களுக்கு எந்தவொரு அழுத்தமும் வராது. பிரைவேட் நம்பர்களிடம் இருந்துவரும் லிங்குகள், அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்வதற்கான கோரிக்கைகள் போன்றவை எச்சரிக்கை அறிகுறிகளாக அமைகின்றன. மேலும், கட்டாயமாக யாரிடமும் உங்களுடைய OTP-ஐ நீங்கள் ஷேர் செய்யக்கூடாது.
போனை உடனடியாக துண்டித்துவிட்டு, வங்கியின் அதிகாரப்பூர்வ அப்ளிகேஷன் அல்லது வெப்சைட்டுக்குச் சென்று உண்மையிலேயே அந்த ஆஃபர் இருக்கிறதா என்பதை சரிபார்க்கவும். மேலும், உங்களுடைய கார்டின் பின்புறத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நம்பருக்கு போன் செய்ய வேண்டும். உண்மையிலேயே அப்படி ஒரு ஆஃபர் இருக்கும் பட்சத்தில் OTP -ஐ பகிர்ந்து கொள்ளாமல், அதனை நீங்கள் பாதுகாப்பான முறையில் ஏற்றுக் கொள்ளலாம்.
இப்பொழுது நீங்கள் உடனடியாக செயல்பட வேண்டும். உங்களுடைய அப்ளிகேஷனில் கார்டை பிளாக் அல்லது ஹாட் லிஸ்ட் செய்யுங்கள். அப்ளிகேஷன் மற்றும் இமெயில் பாஸ்வோர்ட்களை மாற்றுங்கள். கஸ்டமர் கேர் நம்பருக்கு போன் செய்து உங்களுடைய சேனல்களை ஃப்ரீஸ் செய்யுமாறு கோரிக்கை விடுக்கவும். பிறகு 1930 என்ற எண்ணில் அழைத்து சைபர் கிரைமில் ஒரு புகாரை பதிவு செய்யுங்கள்.
November 07, 2025 3:26 PM IST
கிரெடிட் கார்டு லிமிட்டை அதிகப்படுத்தி இருப்பதாக கூறி நடைபெறும் மோசடி…! கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன…?


