கிரெடிட் கார்டு பயனர்களுக்குப் நிம்மதியை அளிக்கும் இந்தப் புதிய விதிமுறைகள், 2027-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் முழுமையாக நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சில நிதி நிறுவனங்கள் தற்போதில் இருந்தே இந்த வசதியை படிப்படியாக நடைமுறைப்படுத்த தொடங்கியுள்ளன. ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு 3 நாட்கள் கூடுதல் சலுகை அளித்திருந்தாலும், மூன்று நாள் காலக்கெடுவிற்குப் பிறகும் கட்டணம் செலுத்தப்படாமல் இருந்தால், அது ‘நிலுவை’ என அதிகாரப்பூர்வமாகக் கருதப்படும். இது சிபில் ஸ்கோரை கடுமையாகப் பாதிப்பதோடு, எதிர்காலத்தில் வங்கிக்கடன் பெறுவதையும் சிக்கலாக்கும். எனவே, அபராதம் தவிர்க்கப்படுவதற்காகக் கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல், உரிய தேதியிலேயே பில் தொகையைச் செலுத்தும் பழக்கத்தை வைத்துக்கொள்வது சிறப்பான நிதி நிர்வாகத்திற்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
