கிருஷாந்தியின் கொலை வழக்கிற்கும் தற்போதைய அரசிற்கும் எந்த தொடர்பும் இல்லை என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் (Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை இன்று (30) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கிருஷாந்தியின் கொலை என்பது தொண்ணூறாம் ஆண்டுகளில் நடந்த கொலை.
அந்த காலத்தில் நாடாளுமன்றத்தில் கூட நாங்கள் ஆட்சியில் இல்லை, ஆகவே எங்களுக்கு அதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
இருப்பினும் அதனை வைத்து சமூக வலைதளங்கள் உட்பட அணைத்திலும் சில அரசியல்வாதிகள் அரசியல் செய்கின்றனர்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |