• Login
Monday, September 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கிருசாந்தியின் நினைவு நாளில் ஜெனிவாவில் ஓங்கி ஒலிக்கப்போகும் அவலங்களின் கேள்விகள்

GenevaTimes by GenevaTimes
September 7, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
கிருசாந்தியின் நினைவு நாளில் ஜெனிவாவில் ஓங்கி ஒலிக்கப்போகும் அவலங்களின் கேள்விகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கிருஷாந்தி குமாரசாமி படுகொலை செய்யப்பட்டு இன்று செப்டெம்பர் 7ஆம் திகதியுடன் 30 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

1996ஆம் ஆண்டு செம்மணி இராணுவச் சோதனைச் சாவடியில் கைது செய்யப்பட்ட 18 வயதான கிருஷாந்தி, பின்னர் பாலியல் அத்துமீறலுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதுடன், அவரைத் தேடிச் சென்ற அவரது தாயார், சகோதரர் மற்றும் அயலவரும் கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கில் இராணுவத்தினரை உள்ளடக்கிய குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டது இலங்கையின் கடந்தகால மனித உரிமை வழக்குகளில் முக்கியத்துவமாகியது.

கிருஷாந்தி வழக்கின் நீதி

ஆனால், கிருஷாந்தி வழக்கின் நீதிமன்றத் தீர்ப்பு செம்மணியின் முழு உண்மையை வெளிக்கொண்டு வந்ததா? என்ற கேள்விக்கு மூன்று தசாப்தங்களுக்குப் பின்னரும் முழுமையான பதில் கிடைக்கவில்லை. 

1998ஆம் ஆண்டு கிருஷாந்தி வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரர் சோமரத்ன ராஜபக்ச செம்மணியில் நூற்றுக்கணக்கானோர் புதைக்கப்பட்டிருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தது, வழக்கை ஒரு தனிப்பட்ட கொலைச் சம்பவத்திலிருந்து மிகப் பெரிய மனித உரிமை விவகாரமாக மாற்றியது.

அதன் பின்னர் 1999ஆம் ஆண்டு செம்மணியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன.

ஆனால், அந்த அகழ்வுகளால் எழுந்த முக்கியமான கேள்விகளுக்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் முழுமையான நீதிசார் விசாரணை நடைபெறவில்லை.

குறிப்பாக, காணாமல் போனவர்களின் எண்ணிக்கை, புதைகுழிகளின் முழுமையான பரப்பு, அவர்களின் மரணத்துக்குப் பொறுப்பானவர்கள் மற்றும் அவர்களுக்கு உத்தரவிட்டதாகக் கூறப்படும் உயர்மட்ட அதிகாரிகள் தொடர்பான கேள்விகள் நீடித்தன.

செம்மணி உண்மைகள்

இதனால் கிருஷாந்தி குமாரசாமி வழக்கு என்பது ஒரு தனிமனித படுகொலைக்கான நீதி என்ற எல்லையைத் தாண்டி, செம்மணியில் புதைக்கப்பட்டிருக்கக்கூடிய ஏனைய உயிர்களின் உண்மையையும் வெளிக்கொணரும் திறவுகோலாக மாறியுள்ளது.

கடந்த 2025ஆம் ஆண்டு செம்மணி பகுதியில் மீண்டும் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றபோது மனித எச்சங்கள் பெருமளவில் கண்டெடுக்கப்பட்டமை, மூன்று தசாப்தங்களாக மறைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் உண்மைகள் மீண்டும் தேசிய மற்றும் சர்வதேச கவனத்திற்கு வந்தன.

2025 செப்டெம்பர் நினைவேந்தலின் போது, அங்கு நூற்றுக்கணக்கான மனித எச்சங்கள் நீதிமன்றப் பாதுகாப்பில் இருப்பதாக உள்ளூர் செய்திகள் தெரிவித்திருந்தன.

மேலும், இந்த ஆண்டு கிருஷாந்தியின் 30ஆவது நினைவு தினம் மற்றொரு முக்கியமான சர்வதேச நிகழ்வுடன் இணைகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது வழக்கமான அமர்வு இன்று, செப்டெம்பர் 7ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகிறது.

இந்த அமர்வில் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்தின் எழுத்து அறிக்கை தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளது.

இதனால், கிருஷாந்தியின் 30ஆவது நினைவு தினம் ஒரு குறியீட்டு முக்கியத்துவத்தையும் பெறுகிறது.

ஜெனீவாவில் இலங்கை

ஒருபுறம், செம்மணியில் புதைக்கப்பட்ட உண்மையைத் தேடும் குடும்பங்கள்.

மறுபுறம், ஜெனீவாவில் இலங்கையின் கடந்தகால மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறல் தொடர்பான சர்வதேச விவாதம்.

இந்த இரண்டு நிகழ்வுகளும் ஒரே நாளில் சந்திப்பது, இலங்கையின் கடந்தகால குற்றங்கள் தொடர்பான விசாரணைகளின் நிலை குறித்து மீண்டும் கேள்வி எழுப்புகிறது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் கடந்தகால அரசியல் கொலைகள், கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதாக தேர்தல் காலத்தில் உறுதியளித்திருந்தது.

ஆனால், தற்போதைய நிலைமையில் பல முக்கிய வழக்குகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இன்னும் ஏற்படவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு  தனது சமீபத்திய அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

குறிப்பாக, கடந்தகால கடுமையான மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகள் தேங்கிக் கிடப்பதும், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதில் அரசியல் விருப்பம் போதுமானதாக இல்லாதிருப்பதும் முக்கிய கவலையாக முன்வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கடந்த பல ஆண்டுகளாக இலங்கை தொடர்பில் பொறுப்புக்கூறல் மற்றும் ஆதாரங்களைப் பாதுகாப்பது குறித்து தீர்மானங்களை நிறைவேற்றி வந்துள்ளது.  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

விஸ்மயா மோகன்லாலின் “துடக்கம்” படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு | Makkal Osai

Next Post

வரவேற்பைப் பெற்ற ஹைட்ரஜன் ரயில்… வேகத்தை உயர்த்த ரயில்வே திட்டம்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
வரவேற்பைப் பெற்ற ஹைட்ரஜன் ரயில்… வேகத்தை உயர்த்த ரயில்வே திட்டம்! | India News (இந்தியா செய்திகள்)

வரவேற்பைப் பெற்ற ஹைட்ரஜன் ரயில்... வேகத்தை உயர்த்த ரயில்வே திட்டம்! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin