Last Updated:
சீனா கிராவிட்டி-1 ராக்கெட் மூலம் கடலில் இருந்து 9 புதிய செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
கிராவிட்டி-1 ராக்கெட் மூலம் கடலில் இருந்து 9 புதிய செயற்கைக்கோள்களை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
கிழக்கு சீனாவில் உள்ள ஷாங்காய் கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் இருந்து, ஒன்பது செயற்கைக்கோள்களை முன்னரே திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதைகளில் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த கிராவிட்டி-1 வணிக ரீதியிலான ராக்கெட்டை ஓரியன்ஸ்பேஸ் (Orienspace) என்ற தனியார் நிறுவனம் தயாரித்துள்ளது.
அதிவேக செயற்கை கோள் மூலமே இணைய சேவையை வழங்குவதற்காகச் சீனா உருவாக்கி வரும் ஒரு பிரமாண்டமான மெகா-செயற்கை கோள் கூட்டமைப்பே கியான்ஃபான் ஆகும். அந்த வகையில், 8 கியான்ஃபான் செயற்கை கோள்கள் மற்றும் EUHT தொழில்நுட்ப சோதனை செயற்கை கோள் ஆகியவை கிராவிட்டி-1 Y3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டன.
தகவல் தொடர்பு மற்றும் இணையம் சார்ந்தவற்றிற்கு அதிவேக சேவைகளை வழங்கவும், செல்போன் கோபுரங்கள் இல்லாத தொலைதூரக் கிராமங்கள் மற்றும் கடல்களுக்கும் இணைய வசதியைக் கொண்டு சேர்க்கவும் இது பேருதவியாக இருக்கும். மேலும், நாட்டின் எல்லைப் பகுதிகளைக் கண்காணிக்கவும், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன.


