தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே மழை பொழிந்து வருகிறது. இதனால் பூக்களின் வரத்தும் குறைந்துள்ள நிலையில், தீபாவளி பண்டிகை காரணமாகப் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் தூத்துக்குடி பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.
தூத்துக்குடி பூ மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் பூக்களானது செட்டிலம்பட்டி, ஓட்டப்பிடாரம், பேரூரணி, குலசேகரநல்லூர், ஆரைக்குளம், புதியம்புத்தூர், ஓசனூத்து, செவல்குளம், மணியாச்சி போன்ற சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து இங்கு விற்பனைக்குக் கொண்டுவரப்படுகிறது. மேலும் பிச்சிப்பூ ஆனது திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி மார்க்கெடிருக்கு விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது.
இது குறித்து பூ வியாபாரி தனம் கூறுகையில், “கடந்த சில வாரங்களாக மழை இருந்ததால் பூக்களின் வரத்தும் குறைந்த காணப்பட்டன. அதனால் பூக்களின் விலை இன்று சற்று உயர்ந்து காணப்படுகிறது. மல்லிகைப்பூ கிலோ 1500 ரூபாய் வரை விற்பனை ஆகின்றது.
இதையும் படிங்க: தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்… தோவாளையில் பட்டாசாய் தெறிக்கும் மலர்கள் விற்பனை…
பிச்சிப்பூ கிலோ ரூ.1000க்கும், கலர்பிச்சிப்பூ 800க்கும், கனகாம்பரம் பூ கிலோ ரூ.2,000க்கும், சென்ட் பூ கிலோ ரூ.1500க்கும், பன்னீர் ரோஜா கிலோ ரூ.250க்கும், பட்டன் ரோஜா கிலோ ரூ.200க்கும், விற்பனை செய்யப்படுகிறது” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
