Last Updated:
ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாரில் ராணுவ வீரர் சந்தீப் பாண்டுரங்க் வீர மரணம் அடைந்த நிலையில், பாதுகாப்புப் படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச்சூடு இரண்டாவது நாளாக நீடிக்கிறது.
ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாரில் ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்த நிலையில், பாதுகாப்புப் படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே இரண்டாவது நாளாக துப்பாக்கிச்சூடு நீடிக்கிறது.
கிஷ்த்வாரை அடுத்த சத்ருவில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று அதிகாலை ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில், ஆபரேஷன் டிராஷி என்ற பெயரில் பாதுகாப்புப் படையினர், தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். அப்போது, தீவிரவாதிகள் பதுங்கி இருந்தது தெரிந்தது. 3 முதல் 4 பயங்கரவாதிகள் சுற்றிவளைக்கப்பட்டதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது முதல் இருதரப்புக்கும் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
#WATCH | Kishtwar, J&K | Encounter between Security Forces and terrorists in the Singhpora area of Chatroo continues for the second consecutive day. One jawan lost his life in the line of duty during the ongoing operation in the Singhpora area of Chatroo in Kishtwar.
(Visuals… pic.twitter.com/qHxBUHMzSZ
— ANI (@ANI) May 23, 2025
இதில் சந்தீப் பாண்டுரங்க் என்ற ராணுவ வீரர் ஒருவர் வீரமரணமடைந்தார். பலத்த காயமடைந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் அவரை உயிர்பிழைக்க வைக்கமுடியவில்லை என ராணுவம் தெரிவித்துள்ளது. இதையடுத்து வீரர் மரணம் அடைந்த அவரது உடலுக்கு ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது. நேற்று காலை தொடங்கிய மோதல் தொடர்ந்து வருகிறது.
Jammu and Kashmir
May 23, 2025 11:05 AM IST


