மலை மீது 350 கிலோ எடையுள்ள திரி, 40 டன் நெய் உள்ளிட்ட பிற பொருட்கள், எடுத்து செல்ல வேண்டியவர்களுக்கான உணவு, காவலர்கள், வனத்துறை அதிகாரிகள் உட்பட்டு உத்தரவு தரப்பட்டு உள்ளது. ஏற்கெனவே 4500 கிலோ நெய் ஆவின் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்து உள்ளோம். திருவண்ணமலையில் நேற்று நடைபெற்ற தேர் திருவிழாவில் மட்டும் 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கூடி உள்ளனர். பக்தர்கள் வரும் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் வசதிகளை செய்து வருகிறோம். கார்த்திகை தீபம் அன்று 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். வழக்கமாக கார்த்திகை தீபம் 2 ஆயிரத்து 500 பேர் வரை மலையேற அனுமதி தந்தோம். தற்போது தீபம் ஏற்றுவதற்கு உண்டான நபர்களை மட்டுமே மலையில் ஏற்றுவோம் என கூறினார்.

