அமெரிக்க ஜனாதிபதி கார்க் தீவு மீது தாக்குதல் நடத்தப்போவதாக அச்சுறுத்திய நடவடிக்கையை எதிர்கொள்ள ஈரான் பல மாதங்களுக்கு முன்பிருந்தே தயாராகி வருவதாக மத்திய கிழக்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கார்க் தீவின் மீது அமெரிக்க இராணுவத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே, ஈரான் கார்க் நகரில் அதிபயங்கர ஆயுத பலத்தை அமைத்து, கூடுதல் இராணுவ வீரர்களையும் வான் பாதுகாப்பு அமைப்புகளையும் நகர்த்தியுள்ளதாக அறியக்கடுகிறது.
ஈரான் தனது பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மேன்பேட்ஸ் (MANPADs) என அழைக்கப்படும், தோளில் வைத்துச் சுடும் தரை-வான் வழிகாட்டு ஏவுகணை அமைப்புகளை கூடுதலாக அந்தத் தீவிற்கு நகர்த்தியுள்ளது என்றும் கூறப்படுகிறது.
[PU0FUTO
]
தரைவழி நடவடிக்கை
ட்ரம்ப் தரைவழி நடவடிக்கைக்கு உத்தரவிட்டால், அமெரிக்கப் படைகள் தரையிறங்க வாய்ப்புள்ள கடற்கரைப் பகுதி உட்பட, அந்தத் தீவில் ஈரான் ஆட்கொல்லி மற்றும் கவச வாகன எதிர்ப்பு கண்ணிவெடிகளைக் கொண்டு பொறிகளை அமைத்துள்ளது என்றும் கூறப்படுகிறத.

இந்நிலையில் ஈரானின் பொருளாதார உயிர்நாடியாக விளங்கும் இந்த முக்கியத் தீவு, அந்நாட்டின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் ஏறக்குறைய 90%-ஐக் கையாளுகிறது.
கார்க் தீவைக் கைப்பற்றும் நடவடிக்கையில், அதிக எண்ணிக்கையிலான அமெரிக்க உயிரிழப்புகள் உட்பட, குறிப்பிடத்தக்க அபாயங்கள் இருக்கும் என்று அமெரிக்க அதிகாரிகளும் இராணுவ நிபுணர்களும் கூறியுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

