Last Updated:
மொத்தம் இரண்டு நாட்கள் நடந்த டெகத்லான் போட்டியில் 27 வயதான தேஜஸ்வின் சங்கர், 7 ஆயிரத்து 976 புள்ளிகள் வென்று வெண்கலப் பதக்கம் வென்றார்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்றார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், மகளிருக்கான ஜூடோ விளையாட்டின் 48 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை அஷ்மிதா டெ, கனடாவின் ஹைடி குவாச்சை 2க்கு 1 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார்.
ஆடவருக்கான 60 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் ஹர்ஷ் சிங், ஆஸ்திரேலியாவின் காட்ஸ் என்பவரை 10-க்கு 0 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி ஆடவர் ஜூடோவில் இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கத்தை பெற்றுத் தந்தார்.
முன்னதாக, பத்து வகையான தடகளப் போட்டிகள் கொண்ட டெகத்லான் பிரிவில் இந்திய வீரர் தேஜஸ்வின் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார். மொத்தம் இரண்டு நாட்கள் நடந்த டெகத்லான் போட்டியில் 27 வயதான தேஜஸ்வின் சங்கர், 7 ஆயிரத்து 976 புள்ளிகள் வென்று வெண்கலப் பதக்கம் வென்றார்.
ஈட்டி எறிதலில் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா, 85 புள்ளி 83 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இதே ஈட்டி எறிதலில் மற்றொரு இந்திய வீரர் யஷ்வீர் சிங் 85 புள்ளி 41 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இலங்கை வீரர் ருமேஷ் தரங்கா தங்கம் வென்றார்.
Aug 01, 2026 11:31 AM IST


