• Login
Sunday, May 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

காப்பீடு துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி – பிரீமியம் குறையுமா? | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
May 3, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
காப்பீடு துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி – பிரீமியம் குறையுமா? | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 03, 2026 8:34 AM IST

LIC-யில் மட்டும் அந்நிய நேரடி முதலீடு வரம்பு 20 சதவீதமாகத் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News18
News18

இந்திய காப்பீடு துறையில் நூறு சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் காப்பீட்டுத் துறையை வளர்ச்சி அடையச் செய்யவும், அதன் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கான நிதியை அதிகரிக்கச் செய்யும் நோக்கிலும் சில முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டது.

அதன்படி, காப்பீடு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 74 சதவீதத்தில் இருந்து நூறு சதவீதமாக உயர்த்த முடிவெடுத்தது.

இதற்காக காப்பீட்டுச் சட்டங்கள் திருத்த மசோதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

பின்னர், இச்சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்த நிலையில், தற்போது அரசாணை வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்திய காப்பீடு துறையில் வெளிநாட்டு நிறுவனங்கள் 100 சதவீதம் முதலீடு செய்ய இனி அரசின் முன் அனுமதி தேவையில்லை. எனவே வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் காப்பீட்டு நிறுவனங்களை தொடங்கலாம் அல்லது ஏற்கனவே உள்ள நிறுவனங்களை வாங்கலாம்.

காப்பீடுதாரர்களுக்கு உடனடி பலன் கிடைக்காது என்றாலும் அடுத்த சில ஆண்டுகளில் 15 சதவீதம் வரை காப்பீட்டு பிரீமியங்கள் குறைவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவில் தொலைதொடர்பு சேவை மற்றும் வங்கி துறையைப் போலவே மிகப்பெரிய மாற்றத்தை காப்பீடு துறையிலும் கொண்டுவரும் என அரசு நம்புகிறது.

அதேநேரம் LIC-யில் மட்டும் அந்நிய நேரடி முதலீடு வரம்பு 20 சதவீதமாகத் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Location :

Delhi,Delhi,Delhi

Read More

Previous Post

Tamilmirror Online || மீண்டும் போர் மூளும் அபாயம்: ஈரான் இராணுவ அதிகாரி எச்சரிக்கை

Next Post

Spirit Airlines | ஈரான் உடனான போரால், மூடுவிழா கண்டது அமெரிக்காவின் ‘மலிவுக்கட்டண’ விமான நிறுவனம்! | World News (உலக செய்திகள்)

Next Post
Spirit Airlines | ஈரான் உடனான போரால், மூடுவிழா கண்டது அமெரிக்காவின் ‘மலிவுக்கட்டண’ விமான நிறுவனம்! | World News (உலக செய்திகள்)

Spirit Airlines | ஈரான் உடனான போரால், மூடுவிழா கண்டது அமெரிக்காவின் ‘மலிவுக்கட்டண’ விமான நிறுவனம்! | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin