காப்பீடு சட்டம் 1938, காப்பீடு நிறுவனங்களின் முதலீட்டையும், காப்பீடுதாரா்களின் நலனையும் பாதுகாக்கிறது. குறிப்பாக, காப்பீடு நிறுவனங்கள் இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையத்தின் (ஐஆா்டிஏஐ) வழிகாட்டுதலின்படி, குறிப்பிட்ட சதவீத தொகையை அரசு பங்குகளிலும் பிற அனுமதிக்கப்பட்ட பங்குகளிலும் முதலீடு செய்வதை இச் சட்டம் கட்டாயமாக்குகிறது. மேலும், இந்திய காப்பீடு நிறுவனங்களில் வெளிநாடுகளில் முதலீடு செய்வதை இச்சட்டம் அனுமதிக்காது. எனவே, காப்பீடு நிறுவனங்களின் தங்களின் முழு நிதியையும் உள்நாட்டில்தான் முதலீடு செய்யவேண்டும்.

