• Login
Sunday, June 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

காத்திருந்த காலம் To இன்ஸ்டன்ட் அக்சஸ் : இருவேறு தலைமுறைகளின் கீழ் மாறிய சராசரி இந்தியரின் அன்றாட வாழ்க்கை. | பிரேக்கிங் மற்றும் லைவ் புதுப்பிப்புகள் (Breaking and Live Updates)

GenevaTimes by GenevaTimes
June 7, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
காத்திருந்த காலம் To இன்ஸ்டன்ட் அக்சஸ் : இருவேறு தலைமுறைகளின் கீழ் மாறிய சராசரி இந்தியரின் அன்றாட வாழ்க்கை. | பிரேக்கிங் மற்றும் லைவ் புதுப்பிப்புகள் (Breaking and Live Updates)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நேருவின் காலம் என்பது நாட்டின் அடிப்படை நிறுவனங்களை உருவாக்குவதாக இருந்தது என்றால், மோடியின் காலம் என்பது அந்த அமைப்புகளை பிரம்மாண்டமாக மாற்றி, நவீன தொழில்நுட்பங்கள் மூலம் மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதாக அமைந்துள்ளது. இந்த மாற்றம் அரசியல் ரீதியானது மட்டுமல்ல, சராசரி இந்தியனின் அன்றாட வாழ்க்கையிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

நம்முடைய தாத்தா, பாட்டி வாழ்ந்த காலத்தில் எல்லாவற்றிற்கும் காத்திருக்க வேண்டிய பற்றாக்குறை நிலையே நீடித்தது. ஒரு லேண்ட்லைன் தொலைபேசி இணைப்பு பெறவோ அல்லது எல்.பி.ஜி கேஸ் இணைப்பு பெறவோ பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. வெளிநாட்டுப் பயணங்கள், சொகுசு கார்கள் மற்றும் விமானப் பயணங்கள் போன்றவை பணக்காரர்களுக்கு மட்டுமே சாத்தியமான ஒன்றாக இருந்தன.

கடிதங்கள் சென்று சேர பல நாட்கள் ஆனதுடன், சிறிய கட்டணங்களைச் செலுத்தவும் நீண்ட வரிசையில் நிற்க வேண்டியிருந்தது. ஆனால், இன்றைய தலைமுறையினருக்கு வளர்ச்சி என்பது மொபைல் ஆப் அப்டேட்டுகள், எக்ஸ்பிரஸ் சாலைகள் மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளில் அடங்கியுள்ளது. ‘UPI’ தொழில்நுட்பத்தின் வருகையால் சாலையோரக் கடைகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை நொடியில் பணப்பரிவர்த்தனை சாத்தியமாகியுள்ளது. உணவு, மளிகை, மருந்துகள் என அனைத்தும் சில நிமிடங்களில் வீட்டின் வாசலுக்கே வந்து சேரும் ‘இன்ஸ்டன்ட்’ கலாச்சாரமாக இன்றைய இந்தியா மாறியுள்ளது.

முந்தைய தலைமுறையினர் தொழில்நுட்பம், பாதுகாப்புத் தளவாடங்கள் மற்றும் எரிசக்தி ஆகியவற்றுக்கு வெளிநாடுகளையே நம்பியிருக்க வேண்டியிருந்தது. அந்நியச் செலாவணி பற்றாக்குறை நாட்டின் வளர்ச்சியை முடக்கியது. ஆனால், இன்றைய இந்தியா ஜி20 மாநாட்டை நடத்துவது, செமிகண்டக்டர் தயாரிப்பில் இறங்குவது, காலநிலை மாற்ற விவாதங்களுக்குத் தலைமை தாங்குவது என உலகளாவிய கொள்கைகளைத் தீர்மானிக்கும் சக்தியாகவும், ‘குளோபல் சவுத்’ (Global South) நாடுகளின் குரலாகவும் உருவெடுத்துள்ளது.

உள்கட்டமைப்பைப் பொறுத்தவரை, ஒரு காலத்தில் ஒற்றை வழிச் சாலைகளில் பல நாட்கள் பயணித்த நிலையை மாற்றி, இன்று அடுக்குமாடி எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைகளும், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களை இணைக்கும் நவீன விமான நிலையங்களும், அதிவேக மெட்ரோ ரயில் கட்டமைப்புகளும் நாட்டின் முகத்தையே மாற்றியமைத்துள்ளன.

முன்பெல்லாம் அரசு அலுவலகங்கள் என்றாலே கோப்புகளும் நீண்ட வரிசைகளும் தான் நினைவுக்கு வரும். ஆனால், இன்று பாஸ்போர்ட் விண்ணப்பம், வரி செலுத்துதல், சான்றிதழ்கள் பெறுதல் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் (Direct Benefit Transfer) என அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக மக்களைச் சென்றடைகின்றன.

அதேபோல், முந்தைய தலைமுறையினரின் ஒரே கனவாக ‘அரசு வேலை’ அல்லது பொதுத்துறை நிறுவனங்களின் நிலையான பணி மட்டுமே இருந்தது; சுயதொழில் செய்வது ஆபத்தானதாகக் கருதப்பட்டது. ஆனால், இன்றைய இளைஞர்கள் உலகிலேயே மிகப்பெரிய ‘ஸ்டார்ட்-அப்’ சூழலை இந்தியாவில் உருவாக்கி, புதிய நிறுவனங்களைத் தொடங்கி வேலைவாய்ப்புகளை அளிப்பவர்களாகவும், கன்டென்ட் கிரியேட்டர்களாகவும் மாறி, இந்தியப் பொருளாதாரத்தை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்ற இலக்கு நிர்ணயித்துச் செயல்பட்டு வருகின்றனர்.

தகவல்கள் கிடைப்பதே அரிதாக இருந்த ஒரு காலத்தில் இருந்து, இன்று ஸ்மார்ட்போன் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகள் மூலம் உலக அறிவை விரல் நுனியில் வைத்திருக்கும் அளவிற்கு இந்தியாவின் வளர்ச்சி அசுர வேகத்தில் பாய்ந்துள்ளது.

Read More

Previous Post

தாகத்தால் துடிதுடித்து இறந்த 49 பேரின் சடலங்களும் பொதுக் கல்லறையில் அடக்கம்

Next Post

IND vs AFG : ஆப்கனுக்கு எதிரான டெஸ்ட் போட்டி.. முதல் இன்னிங்ஸில் 564 ரன்கள் குவித்தது இந்திய அணி | பிரேக்கிங் மற்றும் லைவ் புதுப்பிப்புகள் (Breaking and Live Updates)

Next Post
IND vs AFG : ஆப்கனுக்கு எதிரான டெஸ்ட் போட்டி.. முதல் இன்னிங்ஸில் 564 ரன்கள் குவித்தது இந்திய அணி | பிரேக்கிங் மற்றும் லைவ் புதுப்பிப்புகள் (Breaking and Live Updates)

IND vs AFG : ஆப்கனுக்கு எதிரான டெஸ்ட் போட்டி.. முதல் இன்னிங்ஸில் 564 ரன்கள் குவித்தது இந்திய அணி | பிரேக்கிங் மற்றும் லைவ் புதுப்பிப்புகள் (Breaking and Live Updates)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin