தொழிலதிபர் விஜய் மல்லையாவின் மகனும், பாலிவுட் நடிகருமான சித்தார்த் மல்லையா, தனது நீண்டநாள் காதலியை கரம் பிடித்தார்.
மதுபான உற்பத்தி, விமான நிறுவனம் என பல்வேறு நிறுவனங்களை நடத்தி நாட்டின் முன்னணி தொழிலதிபராக இருந்தவர் விஜய் மல்லையா. இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் ரூ. 9000 கோடி கடன் பெற்று அதனை திருப்பித்தர இயலாமல், பிரிட்டனுக்கு தப்பியோடினார். அவரை இந்தியாவுக்கு அழைத்துவருவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில், அவரின் மகன் சித்தார்த் மல்லையா (37), லண்டனில் தனது காதலியான ஜாஸ்மின் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இது தொடர்பான புகைப்படங்களை இணையத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அவருக்கு பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

