
Last Updated:
கேரளாவில் 5 ஆண்டுகளாக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் தடகள வீராங்கனையை 5 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்கில் 15 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பத்தினம்திட்டா மாவட்டத்தில் பாலியல் தொல்லையில் இருந்து மாணவிகள் தப்பிப்பது எப்படி என குழந்தைகள் நல்வாழ்வுத்துறை அமைப்பினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது மாணவி ஒருவர், 5 ஆண்டுகளாக தான் அனுபவித்து வரும் கொடுமைகளை கூற அதனைக் கேட்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். விளையாட்டு வீராங்கனையான அவர், 13 வயதில் காதலனுடன் தனிமையில் இருந்த வீடியோவை வைத்து காதலன் மட்டுமன்றி, காதலன் நண்பர்கள் என பலரும் பாலியல் வன்கொடுமை செய்ததாக அதிர்ச்சி தகவல் வெளியிட்டார்.
வீடியோ அடுத்தடுத்து பரவ, பள்ளி ஆசிரியர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், உறவினர்கள், தந்தையின் நண்பர்கள் என பலரும் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். தொடர்ச்சியாக 2019-ம் ஆண்டு முதல் தற்போது வரை 64 பேர் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு இருப்பதாக அந்த இளம்பெண் தெரிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து குழந்தைகள் நல அதிகாரிகள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் 64 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இதுவரை 15 பேரை கைது செய்தனர். எஞ்சியவர்களை கைது செய்யும் நடவடிக்கையும் தொடர்கிறது.
January 12, 2025 7:09 AM IST

