காவி உடை அணிவித்து சன்யாச தீட்சை
நிகழ்வின் போது, கணேஷ் சர்மா திராவிட் அதிகாலையில் பஞ்சகங்கை தீர்த்தத்தில் புனித நீராடினார். அவரது தலைமுடி முழுவதும் மழிக்கப்பட்டு, அணிகலங்கள் மற்றும் பூக்கள் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டன. பின்னர், ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவருக்கு காவி உடையை அணிவித்து, சன்யாச தீட்சை வழங்கினார். இதன்மூலம், இவர் இளைய மடாதிபதியாகப் பொறுப்பேற்றார். கணேஷ் சர்மாவின் தமிழக பூர்வீகத் தொடர்பு மற்றும் சம்ஸ்கிருதம், இந்துத்துவ மரபுகளில் அவரது ஆழ்ந்த புலமை ஆகியவை அவரை இப்பொறுப்புக்கு வர காரணமாகி உள்ளது. இவர், தெலங்கானாவின் பசாரா ஸ்ரீ ஜ்ஞான சரஸ்வதி கோயிலிலும் பணியாற்றியவர்.

