இதே நாள் 2023 அன்று இஸ்ரேல் – காஸா போர் தொடங்கியது. இன்றோடு இரண்டு ஆண்டுகள் முடிந்திருக்கின்றன. சர்வதேச விதி மீறலில் தொடங்கி, ஐ.நா சபையை அவமானப்படுத்தியது, சர்வதேச நீதிமன்றத்தைப் புறக்கணித்தது, சர்வதேச மனித உரிமைகள் ஆணையத்தைத் துச்சமென நடத்தியது என இஸ்ரேல் நடந்துகொண்ட விதங்கள் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டன.
ஆனாலும், கடந்த ஆறு மாதங்களாகத்தான் இஸ்ரேலுக்கு எதிரான கண்டனங்கள் வலுப்பெறத் தொடங்கியுள்ளன.
காசாவில் தொடர்ந்து நடத்தப்பட்ட தாக்குதல்கள், செயற்கையாக உருவாக்கப்பட்ட பஞ்சம், கல்விக்கூடங்களும், மருத்துவமனைகளும் குறிவைத்து தகர்க்கப்பட்டது, அகதிகள் முகாம் மீது தாக்குதல், சர்வதேச உதவிகளை காசாவுக்குள் அனுமதிக்காமல் தடுத்தது, 66,000-க்கும் மேற்பட்டவர்களைக் கொலை செய்தது உள்ளிட்ட பல காரணங்கள் இஸ்ரேல் மீது கண்டனம் வலுப்பெறுவதற்கு அடித்தளமிட்டன. இந்த நிலையில், இஸ்ரேலியர்களின் மனநிலை எப்படி இருக்கிறது என ஆய்வு செய்திருக்கிறது இஸ்ரேல் ஜனநாயக நிறுவனம்.

