நாளை ஞாயிற்றுக்கிழமை (19)தொடங்கவுள்ள போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு முன்னதாக, இஸ்ரேலிய(israel) ஆட்சியை காசாவில் இருந்து பின்வாங்க கட்டாயப்படுத்தியதாக பாலஸ்தீன எதிர்ப்பு இயக்கமான ஹமாஸ் தெரிவித்துள்ளது.
இன்று சனிக்கிழமை அந்த அமைப்பு வெளியிட்டஒரு அறிக்கையில், காசாவில் இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பு இலக்குகளை அடையத் தவறிவிட்டது என்றும், “மனிதகுலத்திற்கு அவமானகரமான போர்க்குற்றங்களை” மட்டுமே செய்துள்ளது என்றும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.
15 மாத இனப்படுகொலை
15 மாத இனப்படுகொலைப் போரின் போது இஸ்ரேலின் ஆணவத்தை எதிர்ப்பு “சிதைத்துவிட்டது”, இது கிட்டத்தட்ட 47,000 பாலஸ்தீனியர்களைக் கொன்றது என்று அது மேலும் கூறியது.

ஒக்டோபர் 7, 2023 அன்று ஆக்கிரமிப்பு அமைப்பின் மீது திடீர் தாக்குதலைத் தொடங்கிய பாலஸ்தீனக் குழு, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(benjamin netanyahu) போரை நீட்டிக்க முயற்சித்த போதிலும், “ஆக்கிரமிப்பை நிறுத்த கட்டாயப்படுத்தியதாக” கூறியது.
நிலத்திற்கு திரும்புவதற்கான முடிவுக்கு” நெருக்கமாகிவிட்டனர்
பாலஸ்தீன மக்கள் இப்போது “ஆக்கிரமிப்பு, விடுதலை மற்றும் தங்கள் நிலத்திற்கு திரும்புவதற்கான முடிவுக்கு” நெருக்கமாகிவிட்டனர்.என அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

காசா பகுதியில் போர் நிறுத்தம் மற்றும் கைதிகளை விடுவிப்பதற்காக கத்தார் மற்றும் எகிப்தின் மத்தியஸ்தத்துடன் ஹமாஸுடனான ஒப்பந்தத்திற்கு நெதன்யாகுவின் அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக அவரது அலுவலகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

