Last Updated:
அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை விட்டு பாஜகவில் இணைந்த எம்பி பிரத்யூத் போர்டோலோய்க்கு அடுத்த நாளே திஸ்பூர் தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு.
அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தவருக்கு அடுத்த நாளே சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்பி பிரத்யூத் போர்டோலோய், கடந்த செவ்வாய்க்கிழமையன்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து புதன்கிழமையன்று அவர் அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
இந்நிலையில் வியாழக்கிழமையன்று பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. 88 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ள அந்த பட்டியலில் ஒரே ஒரு நாளுக்கு முன்பு கட்சியில் இணைந்த போர்டோலோய்க்கு திஸ்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், போர்டோலோயின் மகன் பிரதீக் காங்கிரஸ் கட்சி சார்பில் மார்கரிடா தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால் தனது தந்தை பாஜகவில் இணைந்த நிலையில், அவர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.
தாம் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டால் வாக்காளர்கள் குழப்பம் அடைவார்கள் என்றும், தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்காக செயல்படுவேன் என்றும் பிரதீக் கூறினார்.
Mar 19, 2026 10:23 PM IST


