அமராவதி: ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் ஆளுங்கட்சியில் இருந்து விலகி ஞாயிற்றுக்கிழமை ஒய். எஸ். ஷர்மிளா ரெட்டி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
ஆந்திரம் மாநிலத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் ஆளும் கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிந்தல்புடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வுன்னமட்லா எலிசா (63), கூடூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்
வரபிரசாத் ராவ் (70) ஆகியி இருவரும் ஆந்திரம் மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

