டெல்லி நாடாளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு வந்த குட்டி சிறப்பு விருந்தினர்கள் இருவர், பிரதமர் மோடியை சந்தித்து, 3வது முறையாக பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் உள்ள தனது அலுவலகத்தில் இரண்டு சிறப்பு விருந்தினர்களை வரவேற்றார். அவர்கள் யாருமல்ல, ஹரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்யேராவின் பேத்திகள் தான். அந்த குட்டி சிறப்பு விருந்தினர்கள் இருவரும், பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பிரதமர் மோடிக்காக சிறப்பு தேசபக்தி கவிதை ஒன்றை தயாரித்து, குழந்தைகள் இருவரும் பாடினர். அவர்களின் கவிதையால் ஈர்க்கப்பட்ட பிரதமர் மோடி, கவிதையை சிறப்பாக பாடியதற்காக சிறுமிகளை பாராட்டினார். இந்த காட்சியை, ஹரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
My grand daughter Jashodhara reciting a poem in praise of Hon’ble Prime Minister Shri @narendramodi ji. pic.twitter.com/PXQL3KiBmE
— Bandaru Dattatreya (@Dattatreya) December 9, 2023
மேலும், “மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடியை இன்று நாடாளுமன்ற வளாகத்தில் குடும்ப உறுப்பினர்களுடன் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மாண்புமிகு பிரதமருக்கு தொடர்ந்து 3வது முறையாக வாழ்த்துகள். அவரது தொலைநோக்கு தலைமை 2047க்குள் விக்சித் பாரதத்தின் இலக்கை அடையும் வேகத்தை விரைவுபடுத்தும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோவை பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, “ஆக்கப்பூர்வமான மற்றும் அபிமானமானது. அவளுடைய வார்த்தைகள் மிகுந்த ஆற்றலையும் தருகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)