பேருந்துகளும், ஆட்சியும் மாற வேண்டும்
அரசு பேருந்துகளின் விபத்துகளைத் தடுக்க, உடனடி நடவடிக்கைகள் தேவை என்று வலியுறுத்திய அன்புமணி, “பயணிகளை பாதிக்கும் விபத்துகளை ஏற்படுத்தும் பேருந்துகள் மாற்றப்பட வேண்டும். அதேபோல், தமிழ்நாட்டை சீரழிக்கும் திராவிட மாடல் அரசும் மாற வேண்டும். இதுவே விபத்தில்லா பயணத்திற்கும், சிறந்த அரசு நிர்வாகத்திற்கும் எளிய தீர்வாகும்,” என்று தனது அறிக்கையில் தெரிவித்தார்.

